News April 10, 2024

தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு மோசடி

image

தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. நிறுவனங்கள் சட்டப்படி, ஒரு நிறுவனம் 3 ஆண்டுகளை நிறைவு செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க முடியும். ஆனால், SBI தகவல்படி, 3 ஆண்டுகள் நிறைவடையாத 20 நிறுவனங்கள், ₹103 கோடி வரை நன்கொடை வழங்கியுள்ளன. இது பற்றி X-இல் பதிவிட்டுள்ள பிரசாந்த் பூஷன், தேர்தல் பத்திரங்கள் மூலம் பல மோசடிகள் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

Similar News

News August 11, 2025

வைரமுத்துவை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

image

கடந்த 8-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். புத்திசுவாதீனம் இல்லாதவர் செய்யும் தவறு குற்றம் கிடையாது என IPC கூறுவதை சுட்டிக்காட்டி, இதனை அன்றே கணித்த கம்பர், ராமர் குற்றவாளி இல்லை எனக் கூறியதாகப் பேசியிருந்தார். இந்நிலையில் ராமரை வைரமுத்து அவமதித்துவிட்டதாகக் கூறி புதுச்சேரியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News August 11, 2025

கர்நாடக அமைச்சர் KN ராஜண்ணா ராஜினாமா!

image

கர்நாடகாவின் கூட்டுறவுத் துறை அமைச்சர் KN ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் ‘ஓட்டு திருட்டு’ மூலமே BJP மீண்டும் ஆட்சிக்கு வந்ததாகக் கூறிய ராகுல் காந்தி BJP மற்றும் ECI-க்கு எதிரான தனது போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியிலும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாக KN ராஜண்ணா பேசியது சர்ச்சையான நிலையில் பதவி விலகியுள்ளார்.

News August 11, 2025

ராகுல், கனிமொழி உள்ளிட்டோர் கைதுக்கு விஜய் கண்டனம்

image

டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராகப் <<17368703>>போராடிய எதிர்க்கட்சி MP-க்கள் <<>>கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தலை நியாயமாகவும், அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாகவும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு எதிராக தமிழகத்தில் இருந்து முதல் நபராக விஜய் குரல் கொடுத்துள்ளார். இது பற்றி உங்கள் கருத்து?

error: Content is protected !!