News June 26, 2024

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த யெஸ் வங்கி!

image

நிர்வாக சீரமைப்பு, செலவினக் குறைப்பு ஆகிய காரணங்களுக்காக யெஸ் வங்கி தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. முறையற்ற வகையில் கடன் வழங்கியதால், திவால் நிலைக்கு சென்ற யெஸ் வங்கிக்கு எஸ்பிஐ வங்கி உதவிக்கரம் நீட்டி மீட்டெடுத்தது. இந்நிலையில், நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ள யெஸ் வங்கி, முதற்கட்டமாக 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

Similar News

News November 28, 2025

77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் PM மோடி

image

கோவாவில் உள்ள சமஸ்தான கோகர்ண பர்தகலி ஜீவோத்தம் மடத்தில், இந்தியாவின் மிக உயரமான ராமர் சிலையை இன்று PM மோடி திறந்து வைக்கிறார். 77 அடி உயரம் கொண்ட இந்த வெண்கல சிலையை திறந்து வைக்கும் மோடி, சிறப்பு அஞ்சல் தலை & நாணயத்தையும் வெளியிடவுள்ளார். இந்த சிலையை, குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் உருவாக்கியுள்ளார்.

News November 28, 2025

கோலமாவு கோகிலா கதையா ரிவால்வர் ரீட்டா?

image

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படம், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ போன்று உள்ளதாக தகவல்கள் பரவின. இது தனக்கும் முதலில் தோன்றியதாக கீர்த்தி கூறியுள்ளார். இதனால், இப்பட ஷூட்டுக்கு முன்பு மீண்டும் கோலமாவு கோகிலா படத்தை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த படம் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் என்று விளக்கமளித்தார். இப்படம் இன்று ரிலீஸாகிறது.

News November 28, 2025

ரெட் அலர்ட்.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

‘டிட்வா’ புயல் எதிரொலியாக இன்று (நவ.28) சில மாவட்டங்களுக்கு <<18407894>>ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழை எச்சரிக்கையை பொறுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலெக்டர்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று மழையை பொறுத்து விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. அப்படி இல்லையெனில், குடை, ரெயின் கோட் ஆகியவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். Stay safe

error: Content is protected !!