News June 26, 2024
ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த யெஸ் வங்கி!

நிர்வாக சீரமைப்பு, செலவினக் குறைப்பு ஆகிய காரணங்களுக்காக யெஸ் வங்கி தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. முறையற்ற வகையில் கடன் வழங்கியதால், திவால் நிலைக்கு சென்ற யெஸ் வங்கிக்கு எஸ்பிஐ வங்கி உதவிக்கரம் நீட்டி மீட்டெடுத்தது. இந்நிலையில், நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ள யெஸ் வங்கி, முதற்கட்டமாக 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.
Similar News
News October 28, 2025
ICU-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஸ்ரேயஸ் ஐயர்

ஆஸி.,க்கு எதிரான கடைசி ODI போட்டியின் போது, ஸ்ரேயஸ் ஐயருக்கு விலா எலும்பில் அடிபட்டது. அவருக்கு ICU-வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதால், ரசிகர்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில், அவர் ICU-வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாறியுள்ளதாக ஹாஸ்பிடல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக்.30 வரை ஹாஸ்பிடலிலேயே ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனிடையே, அவரது பெற்றோர் சிட்னிக்கு புறப்பட்டுள்ளனர்.
News October 28, 2025
முஸ்தஃபாபாத் டூ கபீர் தாம்: பெயரை மாற்றும் யோகி

வட இந்தியாவில் ஊர்களின் பெயரை மாற்றும் பழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உ.பி.,யின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள முஸ்தஃபாபாத் என்ற கிராமத்தின் பெயர் ‘கபீர் தாம்’ என்று மாற்றவுள்ளதாக, CM யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். கபீர் தாஸ் என்பவர், பக்தி இயக்க முன்னோடியாக திகழ்ந்தவர். சமீபத்தில் டெல்லியின் பெயரை ‘இந்திரபிரஸ்தம்’ என மாற்ற <<18051816>>VHP<<>> கோரியிருந்தது.
News October 28, 2025
கடவுள்கிட்ட பேசுனீங்களா? சந்நியாசிகளிடம் கேட்ட ரஜினி

நீங்கள் கடவுளை பார்த்துள்ளீர்கள், அவர் எப்படி இருப்பார்? கடவுளிடம் நீங்க பேசியிருக்கிறீர்களா என்று சந்நியாசிகளிடம் ரஜினிகாந்த் கேட்பார் என்று அவரது நண்பர் ஸ்ரீஹரி கூறியுள்ளார். எப்போதும் இமயமலை, ரிஷிகேஷ் சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுவதை ரஜினி வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்திலும் அவர் ரிஷிகேஷ் சென்றார். இந்த பயணத்தின் போது ரஜினி ரோட்டு கடையில் கூட சாப்பிடுவார் என்றும் ஹரி தெரிவித்தார்.


