News June 26, 2024
ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த யெஸ் வங்கி!

நிர்வாக சீரமைப்பு, செலவினக் குறைப்பு ஆகிய காரணங்களுக்காக யெஸ் வங்கி தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. முறையற்ற வகையில் கடன் வழங்கியதால், திவால் நிலைக்கு சென்ற யெஸ் வங்கிக்கு எஸ்பிஐ வங்கி உதவிக்கரம் நீட்டி மீட்டெடுத்தது. இந்நிலையில், நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ள யெஸ் வங்கி, முதற்கட்டமாக 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.
Similar News
News December 13, 2025
வெற்றி பெற்றார் கேரளாவின் முதல் பெண் IPS அதிகாரி

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் படி, 45 ஆண்டுகால CPM – LDF கூட்டணி தொடர் வெற்றிக்கு முடிவு கட்டி, திருவனந்தபுரம் மாநகராட்சியை <<18551942>>பாஜக<<>> கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் சாஸ்தமங்கலம் வார்டில் போட்டியிட்ட BJP வேட்பாளரும், கேரளாவின் முதல் IPS அதிகாரியுமான ஸ்ரீலேகா, CPM வேட்பாளர் அம்ரிதாவை 708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார். இவரே திருவனந்தபுரம் மேயராவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம்.
News December 13, 2025
BREAKING: வரலாறு காணாத விலை உயர்வு.. புதிய உச்சம்

தங்கத்தை போன்று முட்டை விலையும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாமக்கல் கோழிப் பண்ணை வரலாற்றில் முதன்முறையாக முட்டை கொள்முதல் விலை ₹6.20 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ₹6.15-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்க வாய்ப்புள்ளது. உங்க பகுதியில் முட்டை விலை என்ன?
News December 13, 2025
இரட்டை வேடம் போடும் திமுக: அன்புமணி

அரசு ஊழியர்களை ஏமாற்றாமல் அவர்களது 10 அம்சக் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி X-ல் அவர், <<18551462>>TN 16% பொருளாதார வளர்ச்சி<<>> அடைந்ததாக மார்தட்டும் CM ஸ்டாலின், நிதி நெருக்கடி எனக் கூறி கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது இரட்டை வேடம் என கூறியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது கோரிக்கைகளை ஆதரித்த திமுக, தற்போது அவற்றை நிறைவேற்ற மறுப்பதாகவும் சாடியுள்ளார்.


