News March 18, 2024

நாமக்கலில் மஞ்சள் பை விழிப்புணர்வு

image

நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை மணாகம் அறக்கட்டளை மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை இணைந்து திருச்செங்கோடு பகுதியில் நீர் நிலைகளின் பராமரிப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.சென்னை எக்ஸ்னோரா அமைப்பின் வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்ட நீர் நிலைகளை பராமரிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் துணிப்பை வாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

Similar News

News January 21, 2026

நாமக்கல் இரவு நேர காவல் ரோந்து விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News January 21, 2026

நாமக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

நாமக்கல்லில் நாளை(ஜன.22) மின் பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை காளப்பநாயக்கன்பட்டி, காரவள்ளி, ராமநாதபுரம்புதுார், பேளுக்குறிச்சி, பள்ளம்பாறை, திருமலைப்பட்டி, கொல்லிமலை,துத்திக்குளம், வையப்பமலை, அவினாசிப்பட்டி, கருங்கல்பட்டி, பிள்ளாநத்தம், எலச்சிபாளையம், ராமாபுரம், பி.கே.பாளையம், வண்டிநத்தம், அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

News January 21, 2026

நாமக்கல் மக்களே செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377

2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093

8.ரத்த வங்கி – 1910

9.கண் வங்கி -1919

10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!