News April 15, 2024
4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு ( 10 மணி) சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, குமரியில் மழை பெய்யும். மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கலாம் என எச்சரித்துள்ளது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் பூமி குளிர்ச்சியடைந்து, வெப்பம் தணிந்துள்ளது. ஆனால், இனி நிலைமை மாறி மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 13, 2025
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: CM ஸ்டாலின்

செப்.15-ம் தேதி தயாராக இருக்க திமுகவினருக்கு ஸ்டாலின் நாள்தோறும் புதிய கட்டளைகளை விடுத்து வருகிறார். தற்போது, ‘தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் ஆகியவற்றை எந்நாளும் காப்பேன்! ஆதிக்கச் சக்திகளின் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என உறுதிமொழி ஏற்க தயாராகுங்கள் என ஆணையிட்டுள்ளார். அண்ணாவின் பிறந்தநாளில் 1 கோடி பேர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது.
News September 13, 2025
மத்திய அரசில் 1,543 வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷனில், களப்பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணிகளுக்கு 1,543 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, எலெக்ட்ரிக்கல்/சிவில் பிரிவுகளில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (பொறியியல்) பட்டமும், 1 வருட அனுபவமும் அவசியம். இதற்கு, மாதம் ₹30,000-₹1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு செப்.17-க்குள் https://www.powergrid.in/en -ல் விண்ணப்பியுங்கள். SHARE பண்ணுங்க.
News September 13, 2025
BCCI புதிய தலைவர் இவரா?

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே அடுத்த BCCI தலைவர் என தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் ரோஜர் பின்னி BCCI தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். வரும் 28-ல் BCCI தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் கிரண் மோர் வரவையே ஆமோதித்ததாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக 49 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகளில் கிரண் மோர் விளையாடியுள்ளார்.