News March 13, 2025
XXX சோப் நிறுவனர் காலமானார்

தென்னிந்தியாவில் பிரபலமான ‘XXX சோப்’ நிறுவனத்தின் தலைவரான மாணிக்கவேல் அருணாச்சலம் காலமானார். சமீபமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர், ஆந்திராவில் உயிரிழந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர், ஆந்திராவில் குடியேறி சோப் தொழிலைத் தொடங்கினார். இத்தொழில் படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்தியாவின் நம்பர் 1 சோப் என்று சொல்லும் நிலையை எட்டியுள்ளது.
Similar News
News March 14, 2025
எப்போதும் உன்னுடன் இருப்பேன் – KL ராகுல்

IPL தொடரில் டெல்லி கேப்டன் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. அக்சர் படேலை கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அக்சர் படேலுக்கு, KL ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘வாழ்த்துகள் பப்பு. புதிய பயணம் சிறப்பாக அமைய எப்போதும் உன்னுடன் இருப்பேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கேப்டன் பதவியில் தனக்கு விருப்பமில்லை என KL ராகுல் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.
News March 14, 2025
‘டாஸ்மாக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை’

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் டெண்டரில் எந்த ஊழலும், முறைகேடும் நடைபெறவில்லை. தமிழக அரசுக்கு எதிராக ED-ஐ மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஏவியுள்ளது. எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
News March 14, 2025
TN Budget: அரசு ஊழியர்களுக்கு 5 முத்தான அறிவிப்புகள்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட <<15757548>>EL விடுப்பு பணம்<<>> பெறுதல் முறை வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது. *சென்னையில் ₹110 கோடியில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு. *அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் ₹1 கோடி விபத்து காப்பீடு.*அரசு அலுவலரின் பெண் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்காக ₹5 லட்சம் வங்கி நிதியுதவி.*பணிக் காலத்தில் எதிர்பாராமல் மரணமடைந்தால் ஆயுள் காப்பீடாக ₹10 லட்சம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.