News September 27, 2024

X தளத்தில் சண்டையிடுவதால் அதன் உரிமையாளருக்குதான் லாபம்

image

தமிழகத்தில் கருத்தியல் ரீதியாக எதிரேதிர் தரப்பினர் X தளத்தில் கருத்துகளை பதிவிட்டு சண்டையிட்டு கொண்டிருந்தால், நமக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை. அதனால் அதன் உரிமையாளருக்குதான் லாபம் கிடைக்கும் என மதுரை ஐகோர்ட் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. பஞ்சாமிர்தம் சர்ச்சை கருத்து பதிவிட்ட பாஜக நிர்வாகி வினோத் பி செல்வத்தின் மீது வழக்கு பதியாததால் முன்ஜாமின் மனு தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 22, 2025

மதுரை: பாலத்திலிருந்து கீழே விழுந்தவர் பலி.!

image

உசிலம்பட்டி அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் பிரேம்குமார்(29). இவர் கல்யாணிபட்டி பாலத்தில் அமர்ந்து நேற்று மாலை மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது போதையில் தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 22, 2025

மதுரை: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News November 22, 2025

மதுரை: சிறுமி தற்கொலை முயற்சி… இளைஞருக்கு வலை

image

அலங்காநல்லுார் அருகே அ.புதுப்பட்டி பச்சையப்பன் மகன் சங்கிலிக்கருப்பு 24. இவர் அப்பகுதி ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை தந்து வந்துள்ளார். ஏற்க மறுத்த சிறுமியின் வீட்டு கதவு மீது கற்களை எறிந்து மிரட்டினார். இதனால் பயந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றார். சிறுமியை காப்பாற்றிய பெற்றோர் சமயநல்லுார் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்ததை தொடர்ந்து வாலிபர் தலைமறைவானார். போலீசார் தேடுகின்றனர்.

error: Content is protected !!