News April 13, 2025

எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் மறைவு: உதயநிதி இரங்கல்

image

எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு Dy CM உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், விஜயபாஸ்கரின் அகால மரணம் அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார். விஜயபாஸ்கர் எழுதிய ‘உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?’ நூல் சமூகநீதியை அழுத்தமாக சொல்லும் ஆவணம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். #RIP

Similar News

News December 7, 2025

அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது: DCM

image

அமித்ஷாவுக்கு எதிராக எந்த கருத்தும் கூறமுடியாத நிலைக்கு EPS தள்ளப்பட்டுள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். அதிமுக இனி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்ற அவர், அது அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை; சொல்லப்போனால் அதிமுகவே இல்லை எனவும் சாடியுள்ளார்.

News December 7, 2025

உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

image

USA குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறிய சில மணிநேரங்களில், உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. 653 ஆளில்லா விமானங்கள், 51 ஏவுகணைகள் மூலம் 700-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் மின்நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு, உலை பாதுகாப்பிற்கான கவலையை எழுப்பியுள்ளது.

News December 7, 2025

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது HAPPY NEWS

image

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இம்மாத இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. வேட்டி, சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வரை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!