News April 13, 2025
எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் மறைவு: உதயநிதி இரங்கல்

எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு Dy CM உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், விஜயபாஸ்கரின் அகால மரணம் அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார். விஜயபாஸ்கர் எழுதிய ‘உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?’ நூல் சமூகநீதியை அழுத்தமாக சொல்லும் ஆவணம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். #RIP
Similar News
News November 28, 2025
ஷூட்டிங்கில் தமிழ் நடிகர் காலமானார்

புதுக்கோட்டையில் கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தின் ஷூட்டிங் தளத்தில் துணை நடிகர் அய்யநாதன் என்பவர் உயிரிழந்துள்ளார். சிவகங்கையை சேர்ந்த அவர், படப்பிடிப்பு தளம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில், மண்டபத்தின் மேலே இருந்து தவறி விழுந்து அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News November 28, 2025
மிகவும் விலையுயர்ந்த 10 வீடுகள்

இந்தியாவின் பல முன்னணி தொழிலதிபர்கள் மிகப்பெரும் செலவில் அழகான, பிரமாண்டமான வீடுகளை கட்டியுள்ளனர். அவர்களில் யாரெல்லாம் மிகவும் விலையுயர்ந்த வீடுகளை வைத்துள்ளனர்? அந்த வீடுகள் எங்கு அமைந்துள்ளன? அவற்றின் மதிப்பு எவ்வளவு? இந்த தகவல்களை எல்லாம் மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொரு படமாக ஸ்வைப் செய்து பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். SHARE
News November 28, 2025
காற்றுமாசு விவகாரத்தில் மோடி மௌனம் சரியா? ராகுல் காந்தி

டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தங்கள் குழந்தைகள் விஷக்காற்றை சுவாசித்து வருவதாக ஒவ்வொரு தாய்மாரும் வேதனைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். குழந்தைகள் மூச்சுத்திணறலால் துடிக்கும் போது மோடி அமைதியாக இருப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் அரசு ஏன் எந்த அவசர நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாடியுள்ளார்.


