News March 16, 2025

எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்

image

நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் (64) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் சில நாட்களாக அவதியடைந்து வந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. தமிழக அரசின் உ.வே.சா விருது பெற்ற இவரின் கனவில் உதிர்ந்த பூ உள்ளிட்ட சிறுகதைகள், திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள், வேணுவன மனிதர்கள் உள்ளிட்ட நூல்கள் பிரபலமானவை. எழுதுவது மட்டுமல்ல, சமூக களப்பணியிலும் முன்னணியில் இருப்பவர்.

Similar News

News March 16, 2025

மனிதரை கல்லாக்கும் கோயில்?

image

ராஜஸ்தானின் குல்தாரா கிராமத்தில் உள்ள கிரடு கோயிலுக்கு இரவில் யாரும் வருவதோ, தங்குவதோ இல்லை. இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, பழங்காலத்தில் முனிவர் ஒருவர் சீடர்களுடன் வந்ததாகவும், சீடர்கள் உடல்நிலை பாதித்தபோது உதவாத கிராமத்தினரை இரவில் கல்லாகிவிடுவர் என சாபமிட்டதாகவும், ஒரு பெண் கல்லானதாகவும் கூறப்படுகிறது. இந்த அச்சமே இரவில் யாரும் அங்கு வராததற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

News March 16, 2025

ஐடி கார்டு இல்லாமல் ஆட்டோ ஓட்ட முடியாது

image

ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில், அடையாள அட்டை வழங்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, PHOTO உடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

News March 16, 2025

வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்

image

பங்குனி மாதம் தொடங்கியவுடனே வெயில் பல்லை இளித்துக் கொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டுகிறது. இந்நிலையில், ஒடிஷா மாநிலத்திற்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக, மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தெலங்கானா, ஜார்கண்ட், மே.வங்கம் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!