News February 14, 2025
இன்று முதல் WPL-2025 தொடக்கம்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739485068388_785-normal-WIFI.webp)
WPL-2025 போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. போட்டி வதோதரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். 5 அணிகள் பங்கேற்கும் இந்த T20 லீக் 2023ல் தொடங்கியது. முதல் சீசனில் MI அணியும், இரண்டாவது சீசனில் RCBயும் வெற்றி பெற்றன.
Similar News
News February 19, 2025
நீங்க தயிர் சாதம்… நாங்க நல்லி எலும்பு!!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737544432911_55-normal-WIFI.webp)
தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே கோபம் வரும்போது, நல்லி எலும்பு சாப்பிடும் தங்களுக்கு கோபம் வராதா என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தமிழ் மண்ணுக்கு தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும், TN அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை, CG குப்பையில் வீசுவதாகவும் சாடியுள்ளார்.
News February 19, 2025
உறுதியான பற்களுக்கு டிப்ஸ்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739896575970_958-normal-WIFI.webp)
உங்கள் பற்களை உறுதியாக வைக்கும் உணவுகள்.
*பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்கள்.
*கேரட், ஆப்பிள், வெள்ளரி, பீட்ரூட் போன்ற காய்கறிகள் மற்றும் பழங்கள்.
*வோக்கோசு, கீரை, வெங்காயம், வெந்தயம், செலரி போன்ற கீரைகள்.
*உலர் திராட்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, குருதிநெல்லி போன்ற பெர்ரிகள்.
*ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை போன்ற பழங்கள்
News February 19, 2025
தமிழ்.. தமிழ்.. 60 ஆண்டாக பேச மட்டுமே செய்கின்றனர்: R.N.ரவி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739917234655_958-normal-WIFI.webp)
TN அரசியல்வாதிகள், தமிழ் தமிழ் எனப் பேச மட்டுமே செய்வதாக R.N.ரவி விமர்சித்துள்ளார். 60 ஆண்டுகளாகவே தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எவ்வித சேவையையும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், பாரதியார், கம்பர், வால்மீகி போன்றோரை பற்றி பேசுகிறோம்; போற்றுகிறோமா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழின் பெருமையை பின்பற்றி நாம் பயணிக்கிறோமா என்பதும் கேள்விக்குறியே எனவும் கூறியுள்ளார்.