News December 15, 2024
WPL 2025 ஏலம் இன்று நடைபெறுகிறது

மகளிர் ஐபிஎல் 2025-க்கான ஏலம் இன்று (டிச. 15) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் 91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 5 டீம்கள் ஏலம் எடுக்கவுள்ளன. முந்தைய பிளேயர்ஸை டீம்கள் தக்கவைக்கவுள்ள நிலையில் மீதமுள்ள 19 இடங்களுக்கு மட்டுமே இந்த ஏலம் நடத்தப்படுகிறது. ஏலம் தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக ஜியோ சினிமாவில் லைவ் ஸ்டீரிமிங் ஒளிபரப்பாகவுள்ளது.
Similar News
News September 5, 2025
அழகால் மயக்கும் கேரளத்து பைங்கிளிகள்

ஓணம் பண்டிகையையொட்டி மலையாள திரையுலக நடிகைகள் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளன. கல்யாணி பிரியதர்ஷன், ரம்யா நம்பீசன், மாளவிகா மோகனன், மிர்னா, சம்யுக்தா உள்ளிட்ட நடிகைகள் பாரம்பரிய ஆடை அணிந்து ஓணம் கொண்டாடியுள்ளனர். அவர்களுடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் இனி என்ட ஸ்டேட் கேரளா, என்ட மொழி மலையாளம், என்ட CM பினராயி விஜயன் என கமெண்ட் செய்கின்றனர்.
News September 5, 2025
சட்டம் அறிவோம்: இந்த சட்டம் ஆண்களுக்கு தெரியணும்!

சில மனைவிகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் கணவனை மிரட்டி குடும்பத்தின் அமைதியையும், நிம்மதியையும் சிதைக்கும் நிலை உருவாகலாம். இத்தகைய சூழலில், BNS பிரிவு 351 உதவும். ஒருவரை அச்சுறுத்தி அவரை சேதப்படுத்தும் நோக்கத்துடன், மிரட்டும் செயலைக் குற்றமாகக் கருதும் தண்டனை சட்டம் இது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 2 ஆண்டுகளும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரையும் சிறை & அபராதம் விதிக்கப்படும். SHARE IT.
News September 5, 2025
BCCI பொறுப்புக்கு காய் நகர்த்தும் பிரவீன் குமார்

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற, முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் விண்ணப்பித்துள்ளார். BCCI-ன் தேசிய அணிக்கான தேர்வுக்குழுவில், 2 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்பதால், பிரவீன் குமார் தற்போது விண்ணப்பித்துள்ளார். அதேபோல், மற்றொரு முன்னாள் வீரரான RP சிங்கும் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.