News November 13, 2024
Wow: 75 வீடுகள் கொண்ட உ.பி. கிராமத்தில் 51 IAS, IPS

உ.பியில் 75 வீடுகளே உள்ள கிராமத்தில் 51 IPS, IAS அதிகாரிகள் உருவாகியுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? மதோபட்டி கிராமத்தில் எந்த பயிற்சி மையங்களும் இல்லை என்பது கூடுதல் சுவாரஸ்யம். சுதந்திர போராட்ட வீரர் தாக்கூர் பகவதி தின் சிங், அவரது மனைவி ஷியாம்ரதி சிங் இருவரும் 1917ஆம் ஆண்டில் கிராம குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கினர். அன்று போட்ட விதை, இன்று விருட்சமாகியுள்ளது.
Similar News
News August 25, 2025
கூலிக்கு U/A சான்று… கிடைக்குமா ? கிடைக்காதா ?

கூலி படத்திற்கு U/A சான்று கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. Madras HC-ல் நடந்த விசாரணையில் படங்களுக்கு சான்று வழங்கும் போது சாதாரண மனிதனின் பார்வையில் இருந்து அணுக வேண்டும் எனவும் வன்முறையை ஊக்குவிப்பது தங்கள் நோக்கமல்ல எனவும் படக்குழு தரப்பு வாதிட்டது. இதற்கு சென்சார் போர்டு தரப்பு கூலியில் கொடூர கொலை, அதிக வன்முறை இருந்ததால் A சான்று தரப்பட்டதாக தெரிவித்தது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
News August 25, 2025
நாளை பள்ளி மாணவர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல் (Re-total), மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. மார்க்கில் மாற்றம் இருக்கும் தேர்வர்களின் பட்டியல் நாளை(ஆக.26) பிற்பகலில் வெளியாகவுள்ளது. மாற்றம் இல்லாதவர்களின் பதிவெண்கள் பட்டியலில் இடம்பெறாதாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் Notification பகுதியில் புதிய மார்க்கை அறியலாம். All the best மாணவர்களே
News August 25, 2025
பெண்கள் நிலம் வாங்க ₹5 லட்சம் மானியம்..!

ஆதி திராவிடர், பழங்குடியின பெண்கள் நிலம் வாங்க தமிழக அரசு ₹5 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. *ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். *விவசாய தொழில் செய்பவராக இருக்க வேண்டும். *தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருக்கக் கூடாது. *விண்ணப்பதாரர் நிலமற்றவராக இருக்க வேண்டும். தகுதியுள்ள மகளிர், www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.