News October 1, 2025
வாவ்.. இவ்வளவு உயரத்தில் பாலமா?

இவ்வளவு உயரத்தில் பாலமா? அதுவும் இவ்வளவு நீளமா? படங்களில், கிராபிக்ஸ் காட்சிகளில் மட்டும் இதுபோன்று நாம் பார்த்திருப்போம். இதனை சீனா ரியலாக செய்து முடித்துள்ளது. உலகின் மிக உயரமான பாலத்தை கட்டி, போக்குவரத்துக்கும் திறந்துவிட்டது. நதியிலிருந்து சுமார் 2,050 அடி உயரத்தில் மற்றும் 4,600 அடி நீளமுள்ள இந்த பாலம், மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு ரைடு போனா எப்படி இருக்கும்?
Similar News
News October 1, 2025
விற்பனைக்கு வந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி

2025 IPL கோப்பையை RCB வென்றதோடு, அதற்கான வெற்றி பேரணியில் 11 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், Royal Challengers அணியை விற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விலையும் ₹17,762 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். தற்போது பிரிட்டனைச் சேர்ந்த Diageo குழுமமே இதன் உரிமையாளராக உள்ள நிலையில், Serum நிறுவன CEO அதார் பூனாவலா அணியை வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
News October 1, 2025
காசாவை நிர்வகிக்கவுள்ளாரா UK முன்னாள் பிரதமர்?

டிரம்ப்பின் அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஹமாஸ் தரப்பில் பதில் தரப்படவில்லை. இதனிடையே, டிரம்ப் திட்டப்படி, காசா ஒரு சர்வதேச இடைக்கால அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். இந்நிலையில், காசாவை மறுசீரமைக்கும் பொறுப்பை UK முன்னாள் பிரதமர் பிளேரிடம் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு செய்தால் பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டும் என்றும் கூறப்படுகிறது.
News October 1, 2025
USA அமைச்சர் பதிலடி வேண்டாம் என்றார்: ப.சிதம்பரம்

பயங்கரவாதத்துக்கு எதிராக காங்., அரசு மென்மையாக நடந்துகொண்டது என்று பாஜக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய ப.சிதம்பரம், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தான் விரும்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால், அப்போதைய USA வெளியுறவு அமைச்சர் பாக்.,க்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என தெரிவித்ததாக கூறினார். மேலும், அரசின் பலம், பலவீனத்தால் பதிலடி கொடுக்க முடிவெடுக்கவில்லை என்றார்.