News September 14, 2024
நோயற்ற வாழ்வை அருளும் ஏகாதசி வழிபாடு

திருப்பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட ஏகாதசித் திருநாளில் திருமாலை வணங்கினால் கோடி நன்மைகள் வந்து சேரும் என்பது வைணவக்குரவர்கள் கூற்று. சிறப்பு வாய்ந்த சர்வ ஏகாதசியான இன்று காலையிலேயே குளித்து, திருமண் இட்டு, பெருமாளுக்கு விரதமிருந்து, மாலை கோயிலுக்குச் சென்று விஷ்ணுவுக்கு துளசி மாலை சாற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் பாடி, நெய் தீபமேற்றி வணங்கினால், நோயற்ற வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
Similar News
News December 10, 2025
மெகுல் சோக்சியை நாடு கடத்த கோர்ட் க்ரீன் சிக்னல்

PNB வங்கியில் ₹13,000 மோசடி செய்துவிட்டு பெல்ஜியத்திற்கு தப்பி ஓடிய மெகுல் சோக்சிக்கு, அந்நாட்டு SC சம்மட்டி அடி கொடுத்துள்ளது. இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்ற கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த SC, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால், அவரை நாடு கடத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
News December 10, 2025
₹1.5 கோடி ஜாக்பாட்.. ஊரை விட்டே ஓடிய குடும்பம்!

பஞ்சாப்பில் கூலி வேலை செய்யும் நசீப் கவுருக்கு லாட்டரியில் ₹1.5 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில், சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றார். ஆனால் அது கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. செய்தி ஊர் முழுக்க பரவ கொள்ளைக்காரர்கள், ரவுடிகள் பணத்தை பறித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், குடும்பத்துடன் ஊரையே காலி செய்து சென்றுவிட்டார். போலீசார் பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம் அளிக்கவே, நிம்மதியடைந்துள்ளார்.
News December 10, 2025
ஓஷோ பொன்மொழிகள்

*நமது உடலைத் தவிர உலகில் வேறு எந்தக் கோவில்களும் இல்லை. *உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள். *இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது. *உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள். அதுவே உங்கள் ஒரே ஆசிரியர். *அன்பே தெய்வீகத்தை நோக்கிய முதல் படி, சரணடைதலே இறுதிப் படி. மேலும் இரண்டு படிகளே முழுப் பயணமுமாகும்.


