News September 14, 2024
நோயற்ற வாழ்வை அருளும் ஏகாதசி வழிபாடு

திருப்பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட ஏகாதசித் திருநாளில் திருமாலை வணங்கினால் கோடி நன்மைகள் வந்து சேரும் என்பது வைணவக்குரவர்கள் கூற்று. சிறப்பு வாய்ந்த சர்வ ஏகாதசியான இன்று காலையிலேயே குளித்து, திருமண் இட்டு, பெருமாளுக்கு விரதமிருந்து, மாலை கோயிலுக்குச் சென்று விஷ்ணுவுக்கு துளசி மாலை சாற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் பாடி, நெய் தீபமேற்றி வணங்கினால், நோயற்ற வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
Similar News
News December 3, 2025
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, <<18449919>>திருவண்ணாமலை, கன்னியாகுமரி<<>> ஆகிய மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடையை தவறாமல் கையுடன் எடுத்துச் செல்லுங்க மக்களே!
News December 3, 2025
இப்படியெல்லாம பூச்சிகள் இருக்கிறதா?

ஆச்சரியமான இந்த உலகில் பல்வேறு விசித்திரமான உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பூச்சி இனங்கள், இப்படியெல்லாம் இருக்கின்றதா என்று நம்மை வியப்படைய செய்கின்றன. இந்தப் பூச்சிகள், இயற்கையாகவே இலைகள், பூக்கள், குச்சிகள் போன்ற தோற்றத்தில் உள்ளன. இந்த விசித்திரமான பூச்சிகள் என்னென்னவென்று, மேலா போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


