News March 17, 2024
மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும் துர்க்கை வழிபாடு

வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனை வழிபட்டால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமையன்று, ராகு கால நேரமான காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரத்தில் கோயிலுக்கு சென்று துர்க்கை அம்மன் முன்பு நல்லெண்ணெய், நெய்யில் பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதுபோல வழிபட்டு வந்தால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். தீராத துன்பங்களும் விலகும்.
Similar News
News November 28, 2025
பைசன் படத்தை புகழ்ந்த கிரிக்கெட்டர் DK

பைசன் திரைப்படம் அருமையாக இருப்பதாக கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜின் படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதில் தத்ரூபமாக நடிக்க துருவ் கடுமையான உழைப்பை போட்டிருப்பது தெரிவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்ததாக கூறிய அவர், படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய CM ஸ்டாலின்

ஜெ.ஜெயலலிதா கவின் கலை பல்கலை.,-யின் 3-வது பட்டமளிப்பு விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இதில், வாழ்நாள் சாதனைக்காக நடிகர் சிவக்குமாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய CM, ஒரு கலைஞனாகவே பட்டம் வழங்க வந்துள்ளதாக தெரிவித்தார். சிவகுமார் தனக்கு சகோதரர் போன்றவர் எனக்கூறிய CM, ஜெ., பல்கலை.,-க்கு ₹5 கோடி மானியத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
News November 28, 2025
₹5,000 கொடுக்கலன்னா ஓட்டு போடமாட்டாங்க: நயினார்

பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் என நயினார் கோரிக்கை வைத்துள்ளார். தனது தொகுதியான நெல்லைக்கு பாலம், ரோடு, கல்லூரி என நிறைய நன்மைகளை CM செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் பொங்கல் பரிசு குறித்து பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பதாக பேசியுள்ளார். மேலும், இந்த அரசால் மக்கள் லட்சக்கணக்கில் நஷ்டத்தில் இருப்பதாகவும், வெறும் ₹1,000 கொடுத்தால் ஓட்டு போடுவார்களா என்பது சந்தேகமே எனவும் தெரிவித்துள்ளார்.


