News March 28, 2024
உலகின் மிகப்பெரிய அனகோண்டா உயிரிழப்பு

பிரேசிலில் உள்ள உலகின் மிகப்பெரிய ராட்சத அனகோண்டா பாம்பு உயிரிழந்தது. அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த இந்த அனகோண்டா பாம்பை, ‘பிரையன் ஃப்ரை’ என்பவருடைய அறிவியல் ஆராய்ச்சி குழு சமீபத்தில் கண்டு பிடித்தது. இந்த பாம்பு பற்றிய ஆவணப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில், இன்று மர்ம நபர்களால் அந்த பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கு வாழும் பழங்குடியினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
ஆண்மை குறைவு வரும்.. உடனே இதை நிறுத்துங்க!

நீண்ட நேரம் லேப்டாப்பை மடி மீது வைத்திருக்கும் மற்றும் நீண்ட நேரம் (4 Hr-க்கு மேல்) பேன்ட் பாக்கெட்டில் மொபைல் போன் வைத்திருக்கும் ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவதாக கொல்கத்தா பல்கலை., ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் ரிஸ்க், மற்றவர்களை விட 10 மடங்கு அதிகமாவதாக எச்சரிக்கின்றனர். மொபைல், லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களே, உஷார்!
News November 23, 2025
இந்திய ODI அணிக்கு கேப்டனாகிறாரா கே.எல்.ராகுல்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கழுத்து வலியில் இருந்து மீள சுப்மன் கில்லுக்கு மேலும் அவகாசம் தேவைப்படுவதால் அணியை ராகுல் வழிநடத்துவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரிஷப் பண்ட் துணை கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது. 3 போட்டிகள் கொண்ட ODI தொடர் வரும் நவ.30-ம் தேதி தொடங்குகிறது.
News November 22, 2025
மெட்ராஸ் HC வாயில்கள் மூடல்.. ஏன் தெரியுமா?

மெட்ராஸ் HC-ன் அனைத்து வாயில்களும் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் HC கட்டப்பட்டதால் அதன் வளாகத்தை வழிப்பாதையாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் வளாகத்தை மக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக HC-ன் வாயில்கள் வருடத்தின் ஒரு நாள் மூடப்படுகின்றன. இது நவ. இறுதி வாரத்தில் பின்பற்றப்படுகிறது.


