News March 28, 2024

உலகின் மிகப்பெரிய அனகோண்டா உயிரிழப்பு

image

பிரேசிலில் உள்ள உலகின் மிகப்பெரிய ராட்சத அனகோண்டா பாம்பு உயிரிழந்தது. அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த இந்த அனகோண்டா பாம்பை, ‘பிரையன் ஃப்ரை’ என்பவருடைய அறிவியல் ஆராய்ச்சி குழு சமீபத்தில் கண்டு பிடித்தது. இந்த பாம்பு பற்றிய ஆவணப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில், இன்று மர்ம நபர்களால் அந்த பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கு வாழும் பழங்குடியினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 23, 2025

காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி?

image

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை காங்., தீவிரமாக எடுத்து வருகிறதாம். அதன் பின்னணியில் TVK கூட்டணியில் 70 தொகுதிகள், DCM பதவி ஆஃபர் இருப்பதாக கூறப்படுகிறது. 1989-ல் தனித்து போட்டியிட்டு 26 தொகுதிகளில் வென்ற காங்., அந்த தொகுதிகளையும், 2-வது இடம் வந்த தொகுதிகளையும் கேட்க உள்ளதாம். DMK கூட்டணியில் உள்ள காங்., தலைவர்கள் அண்மை காலமாக ஆட்சியில் பங்கு கோரிக்கையை தீவிரமாக பேசி வருவது கவனிக்கத்தக்கது.

News August 23, 2025

இலங்கை முன்னாள் அதிபர் ஹாஸ்பிடலில் அட்மிட்

image

முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு நிதியை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய வழக்கில் ரணில் நேற்று கைது செய்யப்பட்டார். ஆக.26 வரை ரிமாண்டில் வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு BP, சர்க்கரை அதிகரித்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது கொழும்பில் உள்ள நேஷனல் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News August 23, 2025

ராகுல் தான் நாளைய PM: செல்வப்பெருந்தகை பதிலடி

image

நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், ராகுல் ஒருபோதும் பிரதமராக முடியாது என அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் கருத்து மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறிய அவர், இம்மாதிரியான கருத்துக்கள் ஆளும் கட்சியின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!