News March 20, 2024
உலக சிட்டுக்குருவிகள் தினம்!

உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. நகர மயமாதல், மனிதர்களின் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்களால், மனிதர்களைச் சார்ந்து வாழும் சிட்டுக்குருவிகள் உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
Similar News
News April 7, 2025
Health Tips: ஊறவைத்த உலர் திராட்சையின் நன்மைகள்!

ஊறவைத்த உலர் திராட்சையை காலையில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செரிமான கோளாறுகள் நீங்கி மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக அமையும். இரும்புச் சத்து இருப்பதால் உடல் சோர்வை போக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது. எலும்பு வலிமைக்கு உதவும் போரான் என்ற கனிமம் இதில் உள்ளது. உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகினால், உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேற்றப்படும்.
News April 7, 2025
கிரிக்கெட்டை தொலைத்துவிட்டார் தோனி

CSK அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட்டை தொலைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் விமர்சித்துள்ளார். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 26 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்த தோனி, தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இது குறித்து பேசிய ஹெய்டன், தோனி அவரது மோசமான ஆட்டத்தை ஒப்புக்கொண்டு எங்களது வர்ணனையாளர் குழுவுடன் வந்து இணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
News April 7, 2025
வரி அதிகரிப்பு எதிரொலி: பெட்ராேல் விலை உயருமா?

பெட்ரோல் மீதான கலால் வரியை ₹11இல் இருந்து ₹13-ஆகவும், டீசல் மீதான கலால் வரியை ₹8இல் இருந்து ₹10-ஆகவும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால், சில்லரை விலையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது, முன்பு கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் அளிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை இதன்மூலம் ஈடுகட்ட இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.