News March 18, 2025

உலகை உலுக்கும் புகைப்படங்கள்.. கண்ணீர்

image

காசாவில் இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதலில் இதுவரை 300 பேர் இறந்துள்ளனர். எந்த பக்கம் திரும்பினாலும் சிறுவர்கள், பெண்கள் என அப்பாவி மக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறும் சத்தம் நெஞ்சை ரணமாக்குகிறது. இதுதொடர்பான <>Video <<>>& Photo-களை வெளியிடும் நெட்டிசன்கள், ‘எந்த நாட்டு மக்களுக்கும் இதுபோன்ற மோசமான நிலை வந்துவிடக்கூடாது’ என கண்ணீருடன் பதிவிடுகின்றனர்.

Similar News

News March 18, 2025

பிரதமர் மோடியை சந்தித்த இளையராஜா!

image

இளையராஜாவின் சாதனை மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாய் அமைந்திருக்கிறது சிம்பொனி அரங்கேற்றம். இந்நிலையில், பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். பிரதமருடனான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இளையராஜா, மறக்க முடியாத சந்திப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். சிம்பொனி உள்பட பல விஷயங்கள் குறித்து தாங்கள் பேசிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

இன்றைய டாப் செய்திகள்

image

*நகைக் கடன் பெற RBI-யின் புதிய விதிமுறைகள்.
*இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 342 பேர் பலி.
*அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: IMD அறிவிப்பு.
*சிறுமியை பலாத்காரம்: காமெடி நடிகருக்கு 20 ஆண்டுகள் சிறை.
*செங்கோட்டையனுக்கு சப்போர்ட் பண்ண இபிஎஸ்: சட்டசபையில் சுவாரஸ்யம்.
*சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்.

News March 18, 2025

சென்செக்ஸ் ஒரே நாளில் 1,131 புள்ளிகள் உயர்வு

image

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,131 புள்ளிகள் இன்று ஒரே நாளில் உயர்வடைந்தன. சர்வதேச பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஆரம்பம் முதல் ஏற்றத்துடன் காணப்பட்டது. இது இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேர முடிவில் 1,131 புள்ளிகள் உயர்ந்து 75,301ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 325 புள்ளிகள் அதிகரித்து 22,834ஆக வர்த்தகமானது.

error: Content is protected !!