News August 20, 2025
உலக புகைப்பட தினம்: போட்டோ எடுத்து மகிழ்ந்த EPS

உலக புகைப்பட தினமான நேற்று வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் இபிஎஸ். அப்போது, கூட்டத்தில் உரையாடிய பின், பிரச்சார வாகனத்திலிருந்த போட்டோகிராபரிடம் கேமராவை வாங்கி, அங்கு கூடியிருந்த மக்களை இபிஎஸ் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதனைப் பார்த்த மக்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், தனது X பக்கத்திலும் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். Share it!
Similar News
News August 20, 2025
EPS-க்கு எதிராக போலி அறிக்கை : ஆம்புலன்ஸ் சங்கம்

வேலூர் அருகே அணைக்கட்டில் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் வந்ததால் EPS கண்டித்தார். மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதலும் நடைபெற்றது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியானது. இந்நிலையில் இந்த அறிக்கை தாங்கள் வெளியிடவில்லை என்றும், சங்க லெட்டர் பேடை அவதூறாக பயன்படுத்தியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
News August 20, 2025
விஜய்யா? பாஜகவா? கூட்டணி யாருடன்: OPS பதில்

விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து யாரும் தன்னை தொடர்புக்கொள்ளவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உங்களை அண்ணன் என அழைத்துள்ளாரே என கேட்டதற்கு, தன்னை அண்ணன் என அழைத்தால் அவர் தனக்கு தம்பி என்றார். பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.
News August 20, 2025
ரால்ப் வால்டோ எமர்சனின் பொன்மொழிகள்

* ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது அறிவு. ஒவ்வொரு நாளும் எதாவது ஒன்றை விட்டுவிடுவது ஞானம்.
*தோல்விகள் தங்கள் வெற்றிகளுக்கான முன்னேற்பாடு என்பதை உணரும்போது மனிதர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
* உங்களை வேறு ஏதாவது ஒன்றாக மாற்றியமைக்க முயற்சிக்கும் இவ்வுலகில், நீங்கள் நீங்களாக இருப்பதே சாதனைதான்.
* சிறந்த நபரை தேர்ந்தெடுக்காதீர்கள், உங்களை சிறந்த நபராக மாற்றக்கூடிய நபரைத் தேர்ந்தெடுங்கள்.


