News August 25, 2024
பொன்னாக்குடியில் உலகத் தர வாய்ந்த சிகிச்சை மையம்

பொன்னாகுடியில் ஸ்காட் மருத்துவ மையம் மற்றும் ஹைதராபாத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒமேகா கேன்சர் கேர் நிறுவனம் இணைந்து புற்று நோய்க்கு உலகத்தரம் வாய்ந்த அதி நவீன சிகிச்சை மையத்தை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக அந்நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவர் மோகனா வம்சி இன்று தெரிவித்தார். வெளிநாடுகளில் புற்று நோய்க்கு உள்ள அனைத்து நவீன சிகிச்சை முறைகளும் திருநெல்வேலி மக்களுக்கு கிடைக்கும்.
Similar News
News March 4, 2026
நாங்குநேரி சம்பவம்; பொதுமக்கள் ஏன் உதவவில்லை? – விளக்கம்

நாங்குநேரியில் சாலையில் செல்பவர்களை அரிவாளால் வெட்டி கொடூர தாண்டவம் ஆடிய கும்பல் பைக்குகளில் மஞ்சங்குளத்திற்கு சென்றனர். அங்கு ஒருவரின் பெயரை(அவரது சமூகத்துடன்) சத்தமாக கூறி வாழ்க கோசமிட்டனர். அப்போது பைக்கில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். அவரை தூக்கி விட முயன்ற அப்பகுதி மக்களை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் உதவிக்கு வந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.
News March 4, 2026
நாங்குநேரி சம்பவத்தில் வெட்டுப்பட்டவருக்கு 5 மணி நேர ஆபரேஷன்

நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த 5 பேர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கணேசன் என்பவர் உயிருக்கு போராடி வருகிறார். இவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். நெல்சனின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவருக்கு நேற்று 5 மணி நேரத்திற்கு மேல் ஆபரேஷன் நடந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
News March 4, 2026
நெல்லையில் சினிமா பாணி சம்பவம்; 60 பேரிடம் சோதனை

பாளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று திருச்செந்தூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் கோட்டுரை சேர்ந்த நம்பி அம்மாள் என்ற மூதாட்டி ஏறினார். பஸ் சற்று தொலைவில் உள்ள கோர்ட்டை கடந்து சென்றபோது மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் நகை திருட்டு போனதாக சத்தம் போட்டார். டிரைவர் பேருந்தை பாளை ஸ்டேஷனிற்கு ஓட்டி வந்தார். குற்றப்பிரிவு போலீசார் 60 பயணிகளிடம் சோதனை நடத்தினர். நகைகள் சிக்கவில்லை.


