News February 12, 2025
பணிச் சுமையா… இது தான் ஒரே தீர்வு?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739337912556_1231-normal-WIFI.webp)
தற்போதைய WorkLifeல் பலரும் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். இதனால் செய்யும் வேலையிலும் தவறிழைப்பதாக நரம்பியல் மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பணிச்சுமையால் மகிழ்ச்சியை இழந்து, தனிப்பட்ட வாழ்விலும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக எச்சரிக்கிறார்கள். இதற்கு தீர்வாக, அவ்வப்போது விடுமுறைகள் எடுத்துக்கொண்டும், பிடித்தமானவர்களுடன் நேரத்தை செலவு செய்யவும் அவர் வலியுறுத்துகிறார்.
Similar News
News February 12, 2025
82 பந்துகளில் 203 ரன்கள் குவித்து சாதனை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739339505794_60420136-normal-WIFI.webp)
காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கான, ‘காஞ்சி யூத் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று (பிப்.11) காஞ்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி ராயல்ஸ் அணியும் மோதின. இதில் காஞ்சி வாரியர்ஸ் அணியைச் சேர்ந்த இளையனார்வேலு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஹேமேஷ் குமார் (16), காஞ்சி ராயல்ஸ் அணிக்கு எதிராக 82 பந்துகளில் 203 ரன்கள் குவித்து சாதனை புரிந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
News February 12, 2025
பெண் குழந்தைகள் குறித்து சிரஞ்சீவி சர்ச்சை கருத்து
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739350126665_1173-normal-WIFI.webp)
பெண் குழந்தைகள் குறித்து சிரஞ்சீவி பாலின பாகுபாடான கருத்து கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. வீட்டில் பேத்திகளோடு இருக்கும் போது, பெண்கள் விடுதிக்குள் இருப்பது போன்று தோன்றுவதாகவும், அதனாலேயே ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து, தங்களது மரபைத் தொடர வழி செய் என்று ராம் சரணிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ராம் மீண்டும் மகளை பெற்றெடுப்பாரோ என பயமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News February 12, 2025
தீர்ப்புக்கு பின் ஓபிஎஸ் அறிவித்தது இதுதான்..
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739345455030_55-normal-WIFI.webp)
அதிமுக வழக்கில் தீர்ப்பு வெளியான உடன், முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஓபிஎஸ் கூறியதால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அவர் என்ன அறிவிக்கப் போகிறார்? செங்கோட்டையன் தலைமையில் புதிய அணியா? என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அப்படி எதையும் அவர் அறிவிக்கவில்லை. மாறாக, அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட ஜெ.,வை தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.