News March 23, 2025

வாரம் 70 மணி நேரம் வேலை.. அதில் என்ன தப்பு?

image

வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என தனது கணவர் நாராயண மூர்த்தி சொன்னதற்கு அவரது மனைவி சுதா மூர்த்தி பதிலளித்துள்ளார். தனது கணவர் அப்படி நேரம் பார்க்காமல் உழைத்ததால்தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உருவாக்க முடிந்ததாகவும், இன்ஃபோசிஸை இவ்வளவு பெரிய நிறுவனமாக மாற்றிய மந்திரக்கோல் கடின உழைப்புதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்வத்துடன் வேலை செய்தால் நேரம் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

Similar News

News March 24, 2025

வெயில்.. மக்களுக்கு எச்சரிக்கை

image

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாள்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்பதால், நண்பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்றால், குடை மற்றும் தொப்பிகளை பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News March 24, 2025

வனப்பகுதியில் உருவாகி வரும் இன்னொரு ‘வீரப்பன்’

image

தமிழ்நாடு – கர்நாடகா வனத்துறைக்கு போக்கு காட்டிவரும் செந்தில் என்பவரை இன்னொரு ‘வீரப்பன்’ என கூறுகின்றனர். வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் கிராமத்தில் வசித்து வந்த செந்தில், யானைகளை வேட்டையாடி தந்தங்களைக் கடத்தியுள்ளான். அதிகாரிகள் பலருக்கும் மான் கறியை விருந்து படைத்ததும் தெரியவந்துள்ளது. அண்மையில் கர்நாடக வனத்துறையினரிடம் சிக்கிய செந்தில், தப்பியோடிய நிலையில் அவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

News March 24, 2025

தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை

image

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் 1 மணி நேரத்திற்கு பிறகு எச்சரித்து அனுப்பியுள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் வழக்குப் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் படகுடன் மீனவர்கள் நிம்மதியுடன் கரை திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படை மனம் மாறிவிட்டதா..!

error: Content is protected !!