News May 7, 2025
மகளிர் உரிமைத்தொகை.. அமைச்சரின் சூப்பர் அப்டேட்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணி ஜூன் 4-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட தகுதி அடிப்படையில் ₹1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இதற்காக, TN முழுவதும் 9,000 இடங்களில் முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News October 28, 2025
இந்திய கிரிக்கெட்டை துரத்தும் சோகம்

காயம் காரணமாக, பிரதிகா ராவல் மகளிர் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக, 2023 ODI ஆடவர் உலகக் கோப்பையின் போதும், வின்னிங் வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக வெளியேறினார். 2019 உலகக் கோப்பையிலும் காயம் காரணமாக ஷிகர் தவான் விலகிய நிலையில், அரையிறுதியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. வீரர்களின் இந்த விலகல்கள், ரசிகர்களின் மனதை பெரும் காயங்களாக மாறியுள்ளது.
News October 28, 2025
அக்டோபர்28: வரலாற்றில் இன்று

*1492 – கொலம்பஸ், கியூபாவை கண்டுபிடித்தார்.
*1627 – முகலாய பேரரசர் ஜஹாங்கீர் நினைவுநாள்.
*1922 – முசோலினி தலைமையிலான பாசிஸ்டுகள், இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
*1955 – Microsoft நிறுவனர் பில் கேட்ஸ் பிறந்தநாள்.
*1988 – நடிகை வாணி போஜன் பிறந்தநாள்.
News October 28, 2025
கொளத்தூரில் போலி வாக்காளர்கள்? எல்.முருகன்

தமிழகத்தில் SIR அவசியமான ஒன்று என எல்.முருகன் தெரிவித்துள்ளார். தோல்வி பயத்திலேயே ஸ்டாலின் இதை எதிர்ப்பதாக விமர்சித்த அவர், முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த SIR நடவடிக்கையால், திமுகவின் முறைகேடுகள் அம்பலமாகும் எனவும் முருகன் தெரிவித்துள்ளார். நவ.4 முதல் தமிழகத்தில் SIR பணிகள் நடைபெறவுள்ளது.


