News August 26, 2024
மகளிர் உரிமை: வருமான உச்சவரம்பு ₹5 லட்சமாகிறது?

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது. தற்போது இந்த வரம்பு ₹2.5 லட்சமாக உள்ளது. இதனால் பல பெண்களுக்கு உரிமைத் தொகை ₹1,000 கிடைக்காத நிலை உள்ளது. இதை விரிவுபடுத்த பெண்களிடம் இருந்து கோரிக்கை வலுத்துவந்த நிலையில், நிபந்தனைகளை தளர்த்தி செப்.15ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
இரவு இங்கெல்லாம் மழை பெய்யும்: IMD

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, தென்காசி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாம். நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடுமாம். உங்க ஊர் நிலவரம் எப்படி இருக்கு?
News July 5, 2025
தவெக ஆலோசகர் பொறுப்பில் இருந்து PK விலகல்

விஜய்யின் தவெகவிற்கான அரசியல் ஆலோசனைக் குழுவில் இருந்து பிரசாந்த் கிஷோர் (PK) தற்காலிகமாக விலகியுள்ளார். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அங்கு தனது (ஜன் சுராஜ்) கட்சியை வலுப்படுத்த கவனம் செலுத்துவதால் விலகியுள்ளார். நவம்பர் மாதத்திற்கு பிறகு மீண்டும் தவெகவுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் குழுவில் இடம் பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News July 5, 2025
TVK கோரிக்கை ஏற்க HC மறுப்பு..!

இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பை கண்டித்து தவெக சார்பில் ஜுலை 3யில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக் கோரி HC-யை நாடியது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்த 15 நாள்களுக்கு முன்பே போலீசாரிடம் மனு வழங்க வேண்டும் என்றனர். இதனால் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்குமாறு மனு வழங்கப்பட்டுள்ளது.