News February 28, 2025

மகளிர் உரிமைத் தொகை: யார்-யார் புதிதாக சேர்ப்பு?

image

மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட இருப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து தனி ரேஷன் அட்டை பெற்றவர்கள், முன்பு விண்ணப்பிக்க தவறியோர், ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டு சரியான ஆவணத்தை தாக்கல் செய்தோர், மின்சாரம் 3,600 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துவோர் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Similar News

News February 28, 2025

WPL: டெல்லி அணிக்கு 124 ரன்கள் இலக்கு

image

மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரில், டெல்லி அணிக்கு 124 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி. பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் முதலில் களமிறங்கிய MIW அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 22, ஹர்மன்பிரீத் 22, அமெலியா 17 ரன்கள் எடுத்தனர். DCW தரப்பில், ஜொனாசென், மின்னு மணி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

News February 28, 2025

மயிலாடுதுறை கலெக்டருக்கு அண்ணாமலை கண்டனம்

image

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் மீது தவறு இருப்பதாக பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. அந்தவகையில், முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கலெக்டர் பேசியுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் பழிபோட்டு, தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணம் என்று சாடினார்.

News February 28, 2025

சர்ச்சை கருத்து: மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம்

image

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, <<15609948>>சிறுமி தவறாலேயே<<>> அந்த சம்பவம் நடந்ததாகக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, அவரை மாற்றி, அப்பதவியில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது.

error: Content is protected !!