News March 29, 2025

மகளிர் உரிமைத் தொகை: தகுதிகளை தளர்த்த கோரிக்கை

image

மகளிர் உரிமைத் தொகை திட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகப் பேரவையில் பேசிய எம்.எல்.ஏ ஜெயக்குமார், மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்கு விதிக்​கப்​பட்​டுள்ள விதி​கள் கடுமை​யாக உள்​ளதால் ஏராள​மான பெண்​கள் இதனைப் பெற முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதனால் கெடு​பிடிகளைத் தளர்த்த வேண்​டும் எனக் கூறியுள்ளார். அதிமுகவின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?

Similar News

News November 24, 2025

தி.மலையில் இது கட்டாயம்; ஆட்சியர் போட்ட உத்தரவு!

image

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அன்னதானம் வழங்குமா? உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு பெற்று அன்னதானம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சாா்பில், அன்னதானம் வழங்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News November 24, 2025

ஷுப்மன் கில் எப்போது அணிக்கு திரும்புவார்?

image

தெ.ஆ., அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சையில் இருந்துவரும் அவர் இதுவரை எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மும்பையில் பிரபல முதுகுத்தண்டுவட சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்றுவரும் அவர், 2026-ல் தான் அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.

News November 24, 2025

BREAKING: மொத்தம் 17 மாவட்டங்களில் விடுமுறை

image

கனமழை எதிரொலியால் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, <<18372068>>14 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மதுரை, அரியலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இன்னும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!