News March 29, 2025
மகளிர் உரிமைத் தொகை: தகுதிகளை தளர்த்த கோரிக்கை

மகளிர் உரிமைத் தொகை திட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகப் பேரவையில் பேசிய எம்.எல்.ஏ ஜெயக்குமார், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் கடுமையாக உள்ளதால் ஏராளமான பெண்கள் இதனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அதிமுகவின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?
Similar News
News November 23, 2025
காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்!

காலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உடலில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பது காரணமாகிறது. இது உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியாவதால் ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் நீரிழப்பும் மாரடைப்பை தூண்டுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன. முறையான தூக்கம், உடற்பயிற்சியால் இந்த ஆபத்தை தடுக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். உஷாரா இருங்க..!
News November 23, 2025
ரஜினியுடன் 3-வது முறை இணைகிறாரா?

ரஜினி 173 படத்தின் இயக்குநர் இவரா அவரா என ஆயிரக்கணக்கான கதைகள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால் ரஜினி இன்னும் எந்த இயக்குநரையும் இறுதி செய்யவில்லை. இதனிடையே நேற்று விமான நிலையத்தில் பா.ரஞ்சித்தை எதிர்ச்சையாக ரஜினி சந்தித்து பேசினார். உடனே பா.ரஞ்சித்துடன் 3-வது முறையாக சூப்பர் ஸ்டார் இணையப்போகிறார் என்ற கதைகள் வர தொடங்கியது. ஏற்கனவே இருவரும் சேர்ந்து கபாலி, கலா ஆகிய 2 படங்களில் பணியாற்றினர்.
News November 23, 2025
நீங்கள் சமர்பித்த SIR படிவத்தின் நிலையை அறிய வேண்டுமா?

வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் SIR படிவங்களை BLO மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளார்களா என்பதை voters.eci.gov.in என்ற இணையதளத்தில் எளிதாக அறிந்து கொள்ளலாம். இதில் உள்ள ‘Fill Enumeration Form’ என்ற லிங்கை பயனர்கள் கிளிக் செய்து Login செய்யவேண்டும். பின்னர் வாக்காளர் அடையாள எண்ணை பதிவு செய்த பிறகு, உங்கள் SIR படிவம் ஏற்கெனவே சமர்பிக்கப்பட்டது என வந்தால், சரியாக சென்று சேர்ந்துவிட்டது என அர்த்தம்.


