News April 1, 2025
மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பிப்பதில் குழப்பம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுடையவர்களுக்கு 3 மாதத்திற்குள் உதவித் தொகை அளிக்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு யார்-யார் விண்ணப்பிப்பது? ரேஷன் கடையில் விண்ணப்பிப்பதா? இ-சேவை மையத்திலா? என அறிவிப்பு இல்லை. இதனால் பெண்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Similar News
News March 20, 2026
தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் குலோத்துங்கன், மத்திய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ஜிஎஸ்டி அலுவலகம், கலால்துறை மற்றும் விமானப்படை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
News March 20, 2026
திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி.. பரபரப்பு

தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக – விசிக இடையே இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று திருமாவளவனை விஜய்யே அழைத்ததாக விசிக மாணவரணி துணை செயலாளர் நெப்போலியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏற்கெனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக வலை விரித்தது விசிகவுக்குத்தான் என அரசியல் நோக்கர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
News March 20, 2026
ஈரான் போர்: மத்திய அரசை புகழ்ந்த காங்., MP சசி தரூர்!

ஈரான் போர் விவகாரத்தில் இந்தியாவின் மெளனம் கோழைத்தனம் அல்ல; சிறப்பான ராஜதந்திரம் எனக் காங்கிரஸ் MP சசிதரூர் புகழ்ந்து பேசியுள்ளார். அதேபோல், மத்திய அரசு, விவேகத்துடனும், எச்சரிக்கையுடனும் சிறப்பாக செயல்படுவதாக மற்றொரு MP மணீஷ் திவாரியும் பாராட்டியுள்ளார். ஈரான் விவகாரத்தில் PM மோடி கோழைத்தனமாக செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி விமர்சித்து வரும் நிலையில், அவரது கட்சி MP-க்கள் அரசை புகழ்ந்துள்ளனர்.


