News April 16, 2025
ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 26, 2025
அதிக சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட மாநிலங்கள்

இந்தியாவில், உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் எந்த மாநிலம் அதிகம் பார்வையிடப்பட்டது என்பதை மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், 2024-25 ஆம் ஆண்டில் அதிகம் பார்வையிடப்பட்ட மாநிலம் எது தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எந்த மாநிலத்திற்கு சுற்றுலா சென்றீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 26, 2025
BREAKING: பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

பள்ளிகள் திறப்பையொட்டி அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் முதல்நாளே, மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடநூல் கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தாமதமின்றி புத்தகங்கள் கிடைப்பதை பள்ளி HM-கள் உறுதி செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 26, 2025
அறிவியலையே அதிரவைத்த ‘டார்க் ஆக்சிஜன்’

செடி, கொடிகள் சூரிய ஒளியை வைத்தே ஆக்சிஜனை உருவாக்கும். ஆனால், சூரிய ஒளியே செல்லாத பசிபிக் கடலின் 13,000 அடி ஆழத்தில் ஆக்சிஜன் உருவாவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Polymetallic nodules என்ற பாறையில் இருக்கும் மின்சாரம் (0.95 வோல்ட்), கடல் நீரில் இருந்து ஆக்சிஜனை பிரித்து வெளியிடுகிறது. ‘டார்க் ஆக்சிஜன்’ எனப்படும் இது, பூமியில் உயிர் உருவானது குறித்த ஆய்வையே மாற்றியமைத்துள்ளது.


