News April 16, 2025
ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 13, 2025
EPSTEIN FILES: டிரம்ப், பில்கேட்ஸ் புகைப்படங்கள் வெளியீடு

பாலியல் குற்றவாளி <<12420595>>ஜெஃப்ரி எப்ஸ்டீனின்<<>> எஸ்டேட்டில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்களை அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ளது. அதில் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பில் கேட்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், இந்த போட்டோக்கள் எந்தவித சட்ட விரோத செயல்பாடுகளையும் குறிக்கவில்லை எனவும் ஜனநாயக கட்சி விளக்கம் அளித்துள்ளது.
News December 13, 2025
டி20 -ல் சாதனை.. ஒரே போட்டியில் 7 விக்கெட்கள்

பஹ்ரைன் வேகப்பந்து வீச்சாளர் அலி தாவூத், டி20-ல் வரலாற்று சாதனை படைத்துள்ளார். பூடானுக்கு எதிரான போட்டியில், 19 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம், டி20-ல் அதிக விக்கெட்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில், மலேசிய வீரர் ஷியஸ்ருல் இத்ருஸ் (7/8) முதலிடத்திலும், சிங்கப்பூர் வீரர் ஹர்ஷா பரத்வாஜ் (6/3) 3-ம் இடத்திலும் உள்ளனர்.
News December 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 548 ▶குறள்: எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
▶பொருள்: ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.


