News April 16, 2025
ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 17, 2025
அரையாண்டு தேர்வு விடுமுறை குறைப்பா? CLARITY

தமிழகத்தில் டிச.24 – ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழையையொட்டி, பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், அதனை ஈடு செய்யும் விதமாக விடுமுறை நாள்களை குறைத்து ஜன.2-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஜன.5 அன்று தான் பள்ளிகள் திறக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.
News December 17, 2025
பக்கா பிளான்.. திமுகவின் அடுத்த டார்கெட்

கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்துவதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், டிச.29-ல் திருப்பூர் பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். கடந்த வாரம் வட தமிழகத்தை குறிவைத்து இளைஞர் அணி மாநாட்டை திமுக நடத்தியிருந்தது.
News December 17, 2025
கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும் அரசு

பிஹாரில் மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தில் 1.40 கோடி மகளிரின் வங்கி கணக்குகளில் தலா ₹10,000 செலுத்தப்பட்டது. அப்போது, தர்பங்கா கிராமத்தில் சில ஆண்களின் கணக்கிலும் தவறுதலாக ₹10,000 செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதை திரும்ப பெற கிராமத்துக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளனர் உள்ளூர் மக்கள். அந்த பணத்தை தீபாவளிக்கே செலவழித்துவிட்டதால் தங்களால் எப்படி தரமுடியும் என்றுள்ளனர்.


