News April 16, 2025
ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 20, 2025
ஆஸ்துமா பிரச்னையா? தீபாவளிக்கான சில டிப்ஸ்

தீபாவளியன்று காற்றுமாசு பல மடங்கு அதிகரிக்கும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க: *வெளியில் செல்லும் போது மாஸ்க் அவசியம் *இன்ஹேலரை அருகில் வைத்துக் கொள்ளவும் *முடிந்தளவு பட்டாசு வெடிப்பதை குறைப்பது நல்லது. *பாதிப்புள்ள குழந்தைகள் பெரிய வெடிகளை தவிர்த்து, பெற்றோரின் மேற்பார்வையில் சின்ன வெடிகளை வெடித்து மகிழலாம் *இந்த சூழ்நிலையில் வெந்நீர் பருகுவது நல்லது.
News October 20, 2025
FLASH: இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் உயர்வு

தீபாவளி நாளில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 317 புள்ளிகள் உயர்ந்து 84,269 புள்ளிகளிலும், நிஃப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 25,824 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக Asian Paints, ITC, Bharti Airtel, M&M உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News October 20, 2025
ஆபரேஷன் Sindoor 2.0; தயாராக இருக்கும் இந்தியா

இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருவதாக இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி உறுதிப்படுத்தியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக கூறிய அவர், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும் என கூறியுள்ளார். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்தது வெறும் டிரெய்லர்தான் என அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.