News April 16, 2025

ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

image

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News January 15, 2026

ராஜ மாதா காலமானார்

image

தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி மகாராணி காமசுந்தரி தேவி(96) காலமானார். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவிற்கு பிறகு, ராஜமாதாவாக உருவெடுத்த இவர் தர்பங்காவில் பனாரஸ் இந்து, பாட்னா, அலகாபாத் பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு நிதியுதவி அளித்தார். 1962-ல் சீனாவுடனான போரின்போது இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார். காமசுந்தரி மறைவால் தர்பங்கா அரச குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

News January 15, 2026

திரை நட்சத்திரங்களின் பொங்கல் க்ளிக்ஸ்! (PHOTOS)

image

கரும்பு, இனிப்பு பொங்கல் என தமிழகமே பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. இந்தவேளையில், நமது திரை நட்சத்திரங்களும் தங்களது வீடுகளில் பாரம்பரிய உடையில் பொங்கலை சிறப்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், கார்த்தி, மாரி செல்வராஜ், சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய நிலையில், அவர்களின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை மேலே SWIPE பண்ணி பாருங்க!

News January 15, 2026

₹1,000 உரிமைத் தொகை.. முக்கிய அறிவிப்பு வந்தது

image

₹1,000 மகளிர் உரிமைத் தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை பெற முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த உதவித் தொகையானது தகுதிக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத்தொகை மட்டுமல்லாது, வேறு எந்தவித உதவித்தொகை பெறுபவராக இருந்தாலும் வேலைவாய்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.

error: Content is protected !!