News April 16, 2025
ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 24, 2025
அதிமுக + பாஜக + ஓபிஎஸ் கூட்டணி.. முடிவை அறிவித்தார்

EPS இருக்கும் வரை <<18654367>>அதிமுகவுடன் கூட்டணி<<>> இல்லை என OPS திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சென்னையில், நேற்று நடைபெற்ற NDA கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு, கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அப்போது, OPS, TTV தினகரனை கூட்டணியில் இணைத்துக் கொள்ள EPS பச்சைக்கொடி காட்டியதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை OPS தரப்பு நிராகரித்துள்ளது.
News December 24, 2025
MGR என்னும் சகாப்தம்!

ஒருவரின் பெயர் தலைமுறைகள் தாண்டியும் பேசப்படுவது சாதாரண புகழல்ல, அபூர்வம்! அது MGR-க்கு சாத்தியமானது. அவருக்கு இன்று 38-வது நினைவு நாள். அவரது ஆட்சியில் தான், அண்ணா யூனிவர்சிட்டி உருவானது. சத்துணவு திட்டம் அறிமுகமானது. திரையில் மக்கள் நாயகனாகவும், நிஜத்தில் புரட்சித் தலைவராக இன்றும் அரசியலின் மையப்புள்ளியாக தொடர்கிறார். உங்களுக்குள் இருக்கும் MGR-ன் நினைவை கமெண்ட்ல சொல்லுங்க.
News December 24, 2025
அரசு ஊழியர்களுக்கு Good News: அன்பில் மகேஸ்

ஜாக்டோ-ஜியோ சார்பில் ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னரும் போராட்டம் நடத்துவதில் அரசு ஊழியர்கள் உறுதியாக உள்ளதாக அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு TN-க்கான நிதியை கொடுப்பதில்லை என்பதை அவர்களிடம் தெரிவித்ததாகவும், எனினும் ஜன.6-க்குள் அவர்களுக்கான நல்ல செய்தியை CM அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


