News April 16, 2025

ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

image

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 23, 2025

Rewind 2025: ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்

image

*டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மே 12-ல் விராட் கோலி அறிவித்தார். தன் 14 வருட கரியரில் 9,230 ரன்கள் குவித்துள்ளார். *மே 7-ல் ரோஹித் சர்மாவும் டெஸ்டுக்கு விடை கொடுத்தார். அவர் 4,301 ரன்கள் எடுத்துள்ளார். *ஆகஸ்டில் புஜாராவும் ஓய்வை அறிவித்தார். அவர் 7,195 ரன்கள் பங்களித்துள்ளார். *ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, பியூஷ் சாவ்லா, விருத்திமான் சாஹா ஆகியோரும் ஓய்வை அறிவித்தனர்.

News December 23, 2025

கணவரை கிரைண்டரில் அரைத்த மனைவி

image

உ.பி.,யில் காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மனைவி கைதாகியுள்ளார். நவ.,18 அன்று காதலனுடன் மனைவி தனிமையில் இருப்பதை பார்த்த கணவன் கௌரவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் கணவன் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்து ரூபி (மனைவி) நாடகமாடியிருக்கிறார். பிறகு சந்தேகத்தின் பேரில் மனைவியிடமே போலீஸ் விசாரிக்க, 27 நாள்கள் கழித்து உண்மை வெளிவந்திருக்கிறது.

News December 23, 2025

அதிகாலையில் கைது… பரபரப்பு!

image

தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. இன்னொரு பக்கம், தடை செய்யப்பட்ட கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததால் 49 மீனவர்கள் நம் நாட்டின் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இப்பிரச்னைக்கு எப்போது விடிவுகாலம் பிறக்குமோ என மீனவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

error: Content is protected !!