News April 16, 2025
ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 9, 2025
பங்குச்சந்தைகள் தொடர் சரிவு: காரணம் இதுதான்

இந்திய பங்குச்சந்தைகள் தொடர் <<18510677>>சரிவை<<>> சந்தித்து வருகின்றன. இதற்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு (1$ – ₹90.15) சரிவு, இந்தியா – USA இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நிச்சயமற்ற தன்மையில் உள்ளது காரணமாக கூறப்படுகின்றன. அந்நிய நிறுவன முதலீட்டார்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவது, ஜப்பானிய பத்திரம் விலை உயர்வு, விரைவில் வெளியாகவுள்ள USA ஃபெடரல் வட்டி விகித முடிவும் காரணங்களாக உள்ளன.
News December 9, 2025
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் <<18509484>>கே.கே.செல்வம்<<>> மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றதால், அவரது அண்ணன் மகனான கே.கே.செல்வத்துடன் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், செங்கோட்டையனுக்கு அளித்த முக்கியத்துவம் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், EPS முன்னிலையில் கே.கே.செல்வம் அதிமுகவில் இணைந்துள்ளார்.
News December 9, 2025
திமுக நிர்வாகி மறைவு: ஸ்டாலின் இரங்கல்

பவானி திமுக நகரச் செயலாளர் பா.சி.நாகராஜன் காலமானார். இந்நிலையில், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி நிகழ்வுகளை பாங்குடன் ஒருங்கிணைப்பதில் நாகராஜன் ஆர்வத்துடன் செயல்பட்டவர் என்று நினைவுகூர்ந்துள்ளார். கால்நூற்றாண்டு காலம் திமுகவில் பயணித்த அவருக்கு சிறந்த நகர செயலாளர் விருது வழங்கியதையும் குறிப்பிட்டு ஸ்டாலின் நெகிழ்ந்துள்ளார்.


