News April 16, 2025
ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 16, 2025
IPL AUCTION: புறக்கணிக்கப்பட்ட வீரர்கள்

அபுதாபியில் நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் செட்டில், பேட்ஸ்மென்களுக்கான ஏலம் நடந்தது. இதில் 2 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 2 உள்நாட்டு வீரர்கள் என 4 பேரை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. ஆஸி., வீரர் ஜேக் பிரேஸர் மெக்குர்க், நியூஸி., வீரர் டெவான் கான்வே மற்றும் உள்நாட்டு வீரர்களான பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான் ஆகியோர் விலை போகவில்லை.
News December 16, 2025
EPS-க்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை: TN அரசு

11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாகவும், இதுதொடர்பாக EPS மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க CBI-க்கு உத்தரவிட கோரியும் ராஜசேகர் என்பவர் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், EPS-க்கு எதிரான இப்புகாரில் முகாந்திரம் இல்லை, இப்புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும் TN அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்து, இவ்வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
₹25.20 கோடி.. கிரீனை தட்டித் தூக்கிய KKR

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற பெருமையை கேமரூன் கிரீன் பெற்றுள்ளார். சென்னையும், கொல்கத்தாவும் அவரை வாங்குவதற்கு மல்லுக்கட்டியதால் அவரது ஏலத்தொகை ₹2 கோடியில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ₹43.40 கோடி வைத்திருந்த போதிலும், ₹25 கோடிக்கு பிறகு ஏலம் கேட்பதை CSK நிறுத்தியது. இதையடுத்து ₹25.20 கோடிக்கு அவரை KKR ஏலம் எடுத்தது. இதனால் CSK ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.


