News January 24, 2025
மகளிர் உரிமைத் தொகை…. விரைவில் முக்கிய அறிவிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை TN அரசு செயல்படுத்தி வருகிறது. 1.14 கோடி பேர் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இன்னும் சிலர் விண்ணப்பித்து காத்து கிடக்கின்றனர். இதை கவனத்தில் வைத்து அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என உதயநிதி அண்மையில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை விரைவில் CM ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 8, 2025
₹888 கோடி ஊழல் அமைச்சரை காப்பாற்றும் ஸ்டாலின்: EPS

அமைச்சர் நேரு தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% – 10% வரை கமிஷன் அடித்துள்ளது <<18501393>>ED-ன் கடிதத்தில் <<>>தெரியவந்துள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே ED அனுப்பிய ₹888 கோடி Cash For Jobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரை ஸ்டாலின் காப்பாற்றி வருவதாகவும் சாடியுள்ளார். கொள்ளையடித்த காசில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம் எனவும் விமர்சித்துள்ளார்.
News December 8, 2025
FLASH: பங்குச்சந்தைகள் கடும் சரிவு

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிந்து 85,102 புள்ளிகளிலும், நிஃப்டி 225 புள்ளிகள் சரிந்து 25,960 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. JSW Steel, Bharat Elec, Shriram Finance, Interglobe Avi உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 2 முதல் 8% வரை வீழ்ச்சி கண்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
News December 8, 2025
சற்றுமுன்: செந்தில் பாலாஜிக்கு HAPPY NEWS

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏன் வாரந்தோறும் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து தேவைப்பட்டால் மட்டும் விசாரணைக்காக அவரை அழைக்கலாம் என ED-க்கு SC உத்தரவிட்டது.


