News January 24, 2025
மகளிர் உரிமைத் தொகை…. விரைவில் முக்கிய அறிவிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை TN அரசு செயல்படுத்தி வருகிறது. 1.14 கோடி பேர் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இன்னும் சிலர் விண்ணப்பித்து காத்து கிடக்கின்றனர். இதை கவனத்தில் வைத்து அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என உதயநிதி அண்மையில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை விரைவில் CM ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 7, 2025
வயசானாலும் Performance-ல் குறைவைக்காத Ro-Ko!

2027 WC தொடரின் போது, Ro-Ko இருவரும் 40 வயதை நெருங்குவார்கள் என்பதால், இளம் வீரர்களுக்கு வழிவிடலாம் என்ற விமர்சனம் உள்ளது. ஆனால், SA-வுக்கு எதிரான ODI தொடரில் அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள், தொடர் நாயகன் விருதை வென்றது கோலி. முன்னதாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் இவை அனைத்தும் ரோஹித் வசம் இருந்தது. பெர்பார்மென்ஸில் குறைவைக்காத அவர்களின் கனவுக்கு வழிவிடலாம் அல்லவா?
News December 7, 2025
BREAKING: விலை தடாலடியாக மாறியது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை Kg-க்கு ₹2 உயர்ந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹114-க்கும், முட்டைக்கோழி ₹112-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை குறைந்ததால், TN முழுவதும் சிக்கன் விலை குறைந்துள்ளது. அதேநேரம் முட்டை விலையில் மாற்றமின்றி ₹6.10-க்கு விற்கப்படுகிறது.
News December 7, 2025
CM செய்வது கண் துடைப்பு நாடகம்: நயினார்

ஆட்சிக்கு வந்து, 55 மாதங்கள் தாமதமாக லேப்டாப்கள் வழங்குவது ஏன் என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது லேப்டாப் வழங்குவேன் என CM அறிவித்துள்ளது கண் துடைப்பு நாடகம் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், மாணவர்களின் கோபத்திற்கு ஆளானதால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பதை CM-ஆல் மறுக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார்.


