News April 25, 2025
மகளிர் உரிமைத் தொகை.. நல்ல செய்தி வந்தாச்சு!

கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜுன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 3 மாதங்களில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என Dy CM உதயநிதி கூறி இருந்தார். இந்நிலையில், முறையான அறிவிப்பு கருணாநிதி பிறந்தநாளையொட்டி வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பயனர்களின் வங்கிக் கணக்கில் ஜுலை முதல் ₹1,000 வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News April 25, 2025
ராணுவ உடை கடைகளுக்கு கிடுக்குப்பிடி

பஹல்காம் தாக்குதலின்போது தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையில் வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், டேராடூன் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ராணுவ உடைகள் விற்கும் கடைகளுக்கு மாநில போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆதார் கார்டு, ராணுவ அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்தால் மட்டுமே ராணுவ உடைகளை விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
News April 25, 2025
6-9-ம் வகுப்புகளுக்கு தேர்வு நிறைவு.. விடுமுறை துவக்கம்

1-5 வகுப்பு மாணவர்கள் ஏப். 17 முதல் விடுமுறையில் உள்ளனர். 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களும் விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில், 6-9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேற்றுடன் தேர்வு முடிந்தது. இதனால் அவர்களுக்கும் இன்று முதல் விடுமுறை துவங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 2-ம் தேதியும், கல்லூரிகள் ஜூன் 16-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 25, 2025
இன்சூரன்ஸில் பயங்கரவாத மரணமும் உள்ளடங்குமா?

‘பயங்கரவாத மரணம்’ என்ற பிரிவு இல்லாத பாலிசிகளில் தீவிரவாத தாக்குதல் மரணங்களில் காப்பீடு கோர முடியாது. அதே நேரத்தில், தனிநபர் விபத்து காப்பீட்டில், ‘பயங்கரவாத பாதுகாப்பு’ என்பது சேர்க்கப்பட்டிருந்தால், ஒரு பயணத்தின் போது பயங்கரவாதத் தாக்குதலில் மரணமடைந்தால், இழப்பீடு கோரலாம். பயணக் காப்பீட்டு விதிமுறைகளில் ADB(Accidental Death Benefit) ரைடர் போன்ற சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.