News February 16, 2025
மகளிர் உரிமைத் தொகை.. மே மாதத்திற்குள் புதியவர்கள்

1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் மேலும் சிலர் புதிதாக இணைய காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், மே மாதத்திற்குள் புதியவர்களை சேர்க்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 22, 2025
இந்திய அரசு மீது மக்களுக்கு எவ்வளவு நம்பிக்கை தெரியுமா?

2025 எடெல்மேன் டிரஸ்ட் பாரோமீட்டரின்படி, அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அளவிடும் உலகளாவிய கணக்கெடுப்பில், இந்தியா அசத்தியுள்ளது. இந்த பட்டியலில், எந்தெந்த நாடுகள் டாப் 8 இடங்களை பிடித்துள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
இதில் இந்தியா எந்த இடத்தில் இருக்கு என்று பாருங்க, கமெண்ட்ல சொல்லுங்க. SHARE
News November 22, 2025
பிக்பாஸ் எவிக்ஷன்: கெமிக்கு குட்பை

பிக்பாஸில் இந்த வார எலிமினேஷனாக கெமி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். கனி, வியானா, அரோரா, விக்ரம் உள்ளிட்ட 13 பேர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், குறைவான வாக்குகளை பெற்று கெமி எவிக்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவிக்ஷனில் இருந்து பிரஜின், வியானா தப்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரி உள்ளதாக கூறப்படுகிறது.
News November 22, 2025
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி: PM மோடி

தெ.ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் பேசிய PM மோடி, அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். போதைப்பொருள்-பயங்கரவாத தொடர்பை தடுத்தல், உலகளவிலான சுகாதார குழு, ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளையும் PM முன்மொழிந்தார். இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


