News September 13, 2024
பெண்களின் புகாரளிக்கும் உரிமை

பெண்கள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நேராக செல்ல வேண்டியதில்லை. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன்படி, பெண்கள் காவல்நிலையத்திற்கு செல்லாமலேயே புகாரளிக்க முடியும். இமெயில் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட முகவரியிலிருந்து எழுத்து மூலமாகவோ காவல்நிலைய முகவரிக்கு புகார்களைத் தெரிவிக்கலாம்.
Similar News
News January 17, 2026
இந்தியாவில் மோசமான சூழல்: டென்மார்க் வீராங்கனை

காற்று மாசுபாடு, மோசமான ஏற்பாடு ஆகிய காரணங்களால் டெல்லியில் நடக்கும் <<18857250>>இந்திய பேட்மிண்டன் ஓபனை<<>> சர்வதேச வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்ஃபெல்ட், இந்தியாவில் எதிர்பார்த்ததை விட மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்ததாக அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒரு சர்வதேச போட்டிக்கு இதுபோன்ற மோசமான ஏற்பாடுகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் கூறியுள்ளார்.
News January 17, 2026
முகமது அலி பொன்மொழிகள்

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *என் வலுவான எதிராளி எப்பொழுதும் நான்தான்.
News January 17, 2026
தொடரும் வேட்டை.. 7,800 சூதாட்ட தளங்கள் முடக்கம்

நேற்று ஒரேநாளில் 242 சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபரில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அமலான நிலையில், இதுவரை 7,800 சூதாட்ட தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சூதாட்டத்தில் அடிமையாகி மக்கள் பணத்தை இழப்பதை தவிர்க்க, சூதாட்ட தளங்களை முடக்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


