News September 13, 2024
பெண்களின் புகாரளிக்கும் உரிமை

பெண்கள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நேராக செல்ல வேண்டியதில்லை. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன்படி, பெண்கள் காவல்நிலையத்திற்கு செல்லாமலேயே புகாரளிக்க முடியும். இமெயில் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட முகவரியிலிருந்து எழுத்து மூலமாகவோ காவல்நிலைய முகவரிக்கு புகார்களைத் தெரிவிக்கலாம்.
Similar News
News January 7, 2026
தூத்துக்குடி: புகார் எண் அறிவித்த ஆட்சியர்

பொங்கல் தொகுப்பு, பொங்கல் பரிசு தொகை ஆகியவை தூத்துக்குடி மாவட்டத்தில் 957 நியாய விலை கடைகள் மூலம் 541007 குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகை நாளை முதல் வழங்கப்படும் நிலையில் இதில் குறைகள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டு அறை 0461-2341471 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE IT
News January 7, 2026
அடுத்த விண்வெளி புரட்சிக்கு தயாராகும் இந்தியா!

பெங்களூருவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘OrbitAID Aerospace’ புதிய வரலாறு படைக்க உள்ளது. விண்வெளியிலேயே செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பும், இந்தியாவின் முதல் ‘AayulSAT’ செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இதனை, வரும் 12-ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. இதன் மூலம், செயற்கைக்கோள்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு, ஏவுதலுக்கான செலவுகளையும், விண்வெளி குப்பைகளையும் குறைக்கலாம்.
News January 7, 2026
ஜனநாயகன் ரிலீஸ்.. தொடரும் சிக்கல்

ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 4 வார கால அவகாசம் தேவை என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கில், மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட படத்தை 5 பேர் கொண்ட மறு ஆய்வுக்குழு இதுவரை பார்க்கவில்லை என்று மெட்ராஸ் HC-ல் கூறப்பட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் வழங்கிய பிறகே படக்குழுவால் கோர்ட்டை நாடமுடியும் என தணிக்கை வாரியம் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் ரிலீசில் சிக்கல் நீடிக்கிறது.


