News September 13, 2024
பெண்களின் புகாரளிக்கும் உரிமை

பெண்கள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நேராக செல்ல வேண்டியதில்லை. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன்படி, பெண்கள் காவல்நிலையத்திற்கு செல்லாமலேயே புகாரளிக்க முடியும். இமெயில் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட முகவரியிலிருந்து எழுத்து மூலமாகவோ காவல்நிலைய முகவரிக்கு புகார்களைத் தெரிவிக்கலாம்.
Similar News
News January 22, 2026
கரூர் வழக்கில் அடுத்த அதிரடிக்கு தயாராகும் CBI

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக SC-ல் அடுத்த ஓரிரு தினங்களில் சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. SC உத்தரவுப்படி வழக்கை கையிலெடுத்த சிபிஐ அதிகாரிகள், கரூர் கலெக்டர் முதல் தவெக தலைவர் விஜய் வரை என பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வரும் பிப். 3-ம் தேதி SC-ல் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதற்கு முன்னதாக வழக்கின் ஆதாரங்களை சிபிஐ அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது.
News January 22, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்? முடிவை அறிவித்தார்

‘ஜன நாயகன்’ பட சென்சார் விவகாரம், கரூர் வழக்கில் CBI விசாரணை ஆகியவற்றை கொண்டு விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுபோன்ற கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல தங்களுக்கு நேரமில்லை என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். மக்கள் தங்களுடன் உள்ளதாகவும், 2026-ல் நிச்சயம் விஜய் முதல்வர் ஆவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
இந்த நம்பரை அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!

MyGov உதவி மையத்தின் ‘+91-9013151515’ என்ற எண்ணை போனில் Save செய்யுங்கள் *இந்த எண்ணுக்கு WhatsApp-ல் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள் *அதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக ஆதார் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது எளிய வழி என்றாலும், இந்த முறையில் ஆதார் அட்டையை பெற, முன்னதாக நீங்கள், DigiLocker-ல் ஆதாரை பதிவேற்றம் செய்து வைக்க வேண்டியது அவசியம். இந்த பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


