News September 13, 2024
பெண்களின் புகாரளிக்கும் உரிமை

பெண்கள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நேராக செல்ல வேண்டியதில்லை. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன்படி, பெண்கள் காவல்நிலையத்திற்கு செல்லாமலேயே புகாரளிக்க முடியும். இமெயில் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட முகவரியிலிருந்து எழுத்து மூலமாகவோ காவல்நிலைய முகவரிக்கு புகார்களைத் தெரிவிக்கலாம்.
Similar News
News January 3, 2026
இனி கல்யாணம் பண்ணாலும் கிரீன் கார்டு கிடைக்காது!

USA-வில் டிரம்ப் நிர்வாகம், குடியேற்ற சட்டங்களை மிக கடுமையாக்கி வரும் நிலையில், இதில் அடுத்த டார்கெட் Marriage Green Card. அமெரிக்கரை திருமணம் செய்தால் கிரீன் கார்டு பெறலாம் என்பதாலேயே, பல திருமணங்கள் நடைபெற்று வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்க குடிமகனை திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்திற்கு பின் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே கிரீன் கார்டு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
News January 3, 2026
வேலு நாச்சியார் துணிச்சல் மிக்கவர்: PM மோடி

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த வேலு நாச்சியாரின் தியாகமும் தொலைநோக்கு தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என PM மோடி கூறியுள்ளார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை அவர் வலியுறுத்தினார் என்றும் மோடி X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
News January 3, 2026
பொங்கல் பண்டிகை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பொங்கல் விடுமுறைக்கு சிரமமின்றி சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் – தாம்பரம் ரயில் ஜன.11, 18, குமரி – தாம்பரம் – நாகர்கோவில் ரயில் ஜன.13, 20, செங்கல்பட்டு – நெல்லை ரயில் ஜன.9, 16 தேதிகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் Railone ஆப் (அ) <


