News March 12, 2025
புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை ₹2,500ஆக உயர்வு

புதுச்சேரி குடும்பத் தலைவிகளுக்கான மகளிர் <<15732122>>உரிமைத்தொகை <<>>₹1000லிருந்து ₹2500ஆக உயர்த்தப்படுவதாக அம்மாநில CM ரங்கசாமி அறிவித்துள்ளார். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ₹2,000 வழங்கப்படும். முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை ₹20,000ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 5, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகினார்

வேல்முருகன், தனியரசை தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரும் திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் அவர் கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தொகுதி ஒதுக்கப்படாததால், திமுக கூட்டணியிலிருந்து விலகி, EPS-ஐ சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.
News April 5, 2026
RCB-க்கு எதிராக இன்று களம் இறங்குவாரா பேபி ABD?

CSK முதலிரு போட்டிகளில் தோல்வியடைந்ததால், சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் மிடில் ஓவர்களில் ரன்களை குவிக்க பிரேவிஸ் களம் காண வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. காயத்தில் இருந்து அவர் கிட்டத்தட்ட மீண்டுவிட்டாலும் RCB-க்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. அதே நேரம் DC-க்கு (ஏப்.11) எதிரான ஆட்டத்தில் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
News April 5, 2026
மகளின் பிறப்புறுப்பில்… தாய் செய்த கொடூரம்

பெற்ற தாயே, தனது 12 வயது மகளை நரபலி கொடுத்த சம்பவம் ஜார்க்கண்டை அதிர வைத்துள்ளது. ரேஷ்மி தேவி தனது மகனின் உடல்நல பிரச்னையை தீர்க்க மந்திரவாதியிடம் சென்றுள்ளார். அவரோ, உனது மகளை நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறியுள்ளார். இதனை நம்பி, ஆண் நண்பர் உதவியுடன் மகளை கொன்றுவிட்டு பிறப்புறுப்பில் குச்சியை செலுத்தி மாந்திரீக சடங்கை ரேஷ்மி செய்துள்ளார். இந்த கொடூர தாய்க்கு என்ன தண்டனை கொடுப்பது?


