News April 2, 2024

கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டம்: புதிய நடைமுறை அமல்

image

தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ₹14,000 நிதியுதவி, இனி 3 தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கா்ப்ப காலத்தின் 4ஆவது மாதத்தில் ₹6,000, குழந்தை பிறந்த 4ஆவது மாதத்தில் ₹6,000, குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் ₹2,000 ஆக வழங்கப்படவுள்ளன. மேலும், பேறு காலத்தில் 3 மற்றும் 6ஆவது மாதங்களில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும்.

Similar News

News February 10, 2026

மகளிருக்கு ₹5,000.. தமிழக மக்களுக்கு HAPPY NEWS

image

பிஹாரில் சுயதொழில் தொடங்க பெண்களுக்கு ₹10,000 வழங்கிய திட்டம், NDA கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க பெரிதும் உதவியது. அதே போன்றதொரு திட்டத்தை தமிழகத்திற்கும் அறிவிக்க PM மோடி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை முறியடிக்கும் வகையில், மகளிருக்கு ₹5,000 வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சுயதொழில் திட்டமாகவோ, கடனுதவி திட்டமாகவோ இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

News February 10, 2026

நீங்க குடிக்கிறது காபிதூளா? களிமண்ணா?

image

உங்க காபி தூள் கலப்படமானது என டவுட்டா? இந்த சிம்பிள் ட்ரிக்ஸை யூஸ் பண்ணி உங்க காபி தூளின் தரத்தை கண்டறியலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் காபி தூளை கலந்து 5 நிமிடங்கள் அப்படியே வைங்க. சுத்தமான காபி தூள் என்றால், டம்ளரின் அடியில் எதுவும் தங்காது. கலப்படமானது என்றால், காபி தூளிலுள்ள களிமண் துகள்கள் அடியில் தங்கிவிடும். அனைவரும் தெரிஞ்சிக்க வேண்டிய செய்தியை அதிகளவில் ஷேர் பண்ணுங்க.

News February 10, 2026

நீண்டகால பேன் தொல்லையால் 12 வயது சிறுமி பலி!

image

ஒடிசாவின் பூரி நகரில் நீண்டகால பேன் தொல்லை காரணமாக லட்சுமிப்ரியா சாஹூ என்ற 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பேன் தொல்லையால் சிறுமி அவதிப்பட்டு வந்ததாகவும், பலகட்ட சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் கூறினர். இதற்கிடையே சிறுமியின் மரணம் குறித்து மாவட்ட தலைமை, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!