News April 2, 2024
கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டம்: புதிய நடைமுறை அமல்

தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ₹14,000 நிதியுதவி, இனி 3 தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கா்ப்ப காலத்தின் 4ஆவது மாதத்தில் ₹6,000, குழந்தை பிறந்த 4ஆவது மாதத்தில் ₹6,000, குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் ₹2,000 ஆக வழங்கப்படவுள்ளன. மேலும், பேறு காலத்தில் 3 மற்றும் 6ஆவது மாதங்களில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும்.
Similar News
News April 19, 2025
மார்டனாகும் மெட்ராஸ்: ஜூன் முதல் மின்சார பஸ்!

சென்னையில் ஜூன் மாதம் முதல் 100 மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 பணிமனைகளில் இருந்து பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சார்ஜர் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
News April 19, 2025
பாமக- தவெக கூட்டணி பேச்சு.. யார் CM?

விஜய்க்கு நெருக்கமான ஆடிட்டர் ஒருவர் ராமதாஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் CM பதவியை ராமதாஸ் கேட்க, துணை முதல்வர் பதவிக்கு விஜய் தரப்பு ஓகே சொல்லி இருக்கிறதாம். ஆனால், CM பதவியில் ராமதாஸ் உறுதியாக நிற்க, விஜய்யிடம் தெளிவான பதில் பெற்று வாருங்கள், கூட்டணி பேசி முடிக்கலாம் என அவர் கூறியுள்ளாராம்.
News April 19, 2025
தொழில்முனைவோரை ஊக்குவிக்க 5 அறிவிப்புகள்

தொழில்முனைவோரை ஊக்குவிக்க 5 புதிய அறிவிப்புகளை CM வெளியிட்டார். புவிசார் குறியீடு மானியம் ₹1 லட்சமாக உயர்த்தப்படும். அம்பத்தூரில் உலோகவியல் ஆய்வகங்கள் ₹5 கோடியில் அமைக்கப்படும். காஞ்சிபுரம், பழந்தண்டலத்தில் ₹5 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள். காக்கலூர் தொழிற்பேட்டையில் ₹3.90 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க ₹2 லட்சம் என அறிவிப்புகளை வெளியிட்டார்.