News March 15, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வரவு வைக்கப்பட்டது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 19ஆவது தவணை சற்று முன்பு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என நேற்று பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உங்கள் வங்கிக் கணக்கில் ₹1,000 வந்துவிட்டதா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 15, 2025
ஆண்களே, ரிலாக்ஸ் பிளீஸ்…

ஸ்ட்ரெஸ் அதிகமுள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. குழந்தையின்மைக்கான காரணங்களில் 40% ஆண்களிடமே உள்ளது. இந்நிலையில் வேலை மற்றும் பிற பிரச்னைகளால் மன அழுத்தத்துக்கு ஆளாகும் ஆண்களின் உடலில், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு குறைவதாகவும், இது அவர்களின் விந்தணு தரத்தை பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆகவே, ஆண்களே டென்ஷன் ஆகாதீங்க. ரிலாக்ஸ் பிளீஸ்!
News March 15, 2025
கட்சியை விட்டு விலகும் செங்கோட்டையன்?

EPS – செங்கோட்டையன் இடையேயான பிளவு இன்று வெட்ட வெளிச்சம் ஆகிவிட்ட நிலையில், செங்கோட்டையனின் பேச்சு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. <<15773361>>தான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர் எதைக் கூறியிருக்கிறார்<<>> என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கட்சியை விட்டு விலகி வேறு பாதையில் பயணிக்க இருக்கிறாரா, அல்லது கட்சிக்குள்ளேயே கலகம் செய்ய காத்திருக்கிறாரா? காலம் பதில் சொல்லும்.
News March 15, 2025
வெற்றிப் பாதையில் பயணம் – செங்கோட்டையன் சூசகம்!

இபிஎஸ் உடனான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் செங்கோட்டையன் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இக்கட்டான நிலையில் இருப்பதால் வெளிப்படையாக எதையும் பேச முடியாது என கூறியுள்ளார். தான் போகும் பாதை சரியானது எனத் தெரிவித்துள்ள செங்கோட்டையன், திட்டமிட்ட பாதையில், வெற்றி பெறும் பாதையில் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.