News March 15, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வரவு வைக்கப்பட்டது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 19ஆவது தவணை சற்று முன்பு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என நேற்று பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உங்கள் வங்கிக் கணக்கில் ₹1,000 வந்துவிட்டதா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 17, 2025
Loan Appகளை டவுன்லோடு செய்யாதீங்க

ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், போலி Loan Appகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். பணம் தேவைப்படும் மக்களை குறிவைத்து, மிகக்குறைந்த வட்டி, விரைவான ஒப்புதல் என ஆசை வார்த்தைகள் கூறி மோசடிக் கும்பல்கள் வலை விரிக்கின்றன. இதை நம்பி, Loan Appகளை பதிவிறக்கம் செய்யும்போது, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, மோசடி அரங்கேற்றப்படுவதாக எச்சரித்துள்ளனர்.
News March 17, 2025
குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுக்க ஆணை

அனைத்து பள்ளிகளிலும் வரும் 26ம் தேதி பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், Good touch, Bad touch குறித்தும், POCSO சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
News March 17, 2025
ராமர் கோயிலுக்கு ₹400 கோடி வரி

கடந்த 5 ஆண்டுகளில் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ₹400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். GST வரியாக ₹270 கோடியும் பிற வரி வகைகளின் கீழ் ₹130 கோடியும் அரசுக்குச் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோயிலுக்கு கூட வரியா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?