News March 15, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வரவு வைக்கப்பட்டது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 19ஆவது தவணை சற்று முன்பு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என நேற்று பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உங்கள் வங்கிக் கணக்கில் ₹1,000 வந்துவிட்டதா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 16, 2025
மஸ்க்கின் மகனுக்கு உதவிய டிரம்ப்

டிரம்பின் ஹெலிகாப்டரில் மஸ்க்கின் மகனை ஏற்றிச் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புளோரிடாவில் உள்ள தனது வீட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதியுடன் மஸ்கின் மகன் சென்றார். சிறுவன் ஹெலிகாப்டரில் ஏற சிரமப்பட்டபோது, டிரம்ப் அவனுக்கு உதவினார். கடந்த சில நாட்களாக மஸ்க் தனது மகனை அமெரிக்காவில் நடக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2025
WPL: இவர்களுக்கே ஆட்ட நாயகி, தொடர் நாயகி விருது

WPL பைனலில் DC அணியை வீழ்த்தி, MI அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த MI அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார். அத்துடன், இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த MI அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார். மேலும், நாட் சீவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.
News March 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 208 ▶குறள்: தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று. ▶பொருள்: தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.