News April 3, 2024

விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை

image

மக்களவைத் தோ்தல் முடிந்த பின்பு, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என அமைச்சா் உதயநிதி கூறியுள்ளார். “மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்கு 1.60 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 1.17 கோடி மகளிருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இது பெரிய திட்டமாக இருப்பதால் குறைகள் விரைவில் சரி செய்யப்பட்டு, விடுபட்ட அனைவருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும்” என்றாா்.

Similar News

News August 18, 2025

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? திருச்சி சிவா பதில்

image

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுகவின் திருச்சி சிவாவை களமிறக்க ‘INDIA’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை யாரும் பரிசீலனையில் இல்லை என INDIA கூட்டணி தரப்பு கூறியது. டெல்லியில், வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தையும் INDIA கூட்டணி கூட்டியுள்ளது. இதனிடையே, வேட்பாளர் தேர்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.

News August 18, 2025

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழை கொட்டும்: IMD

image

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் கரையை கடக்க உள்ளது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், ஆக.24 வரை மழை நீடிக்குமாம். கவனமா இருங்க நண்பர்களே!

News August 18, 2025

TNPSC குரூப்-2 இரண்டாம் கட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு

image

TNPSC குரூப் 2, 2A தேர்வில் (20.6.2024 அறிவிக்கை) பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆக.29-ல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் <>www.tnpsc.gov.in<<>> இணையதளம் மற்றும் தேர்வர்களுக்கு SMS, E-Mail மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!