News September 28, 2025

சரமாரியாக குற்றம்சாட்டிய பெண்கள்

image

கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 40க்கும் மேற்பட்டோர் சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக, அதிகமான மக்கள் கூடுவார்கள் என தெரிந்தும், குறுகிய இடத்தை தந்தது ஏன்? மின்சாரம் நிறுத்தப்பட்டது ஏன்? என்று கேட்ட பெண்கள், போதிய பாதுகாப்பு இல்லாததே, உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.

Similar News

News September 28, 2025

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய் துணை நிற்பார்: தவெக

image

கரூரில் ஏற்பட்ட துயரத்தால் விஜய் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக தவெகவின் வழக்கறிஞர் அணி தலைவர் அறிவழகன் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய்யும், தவெகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் ஆலோசித்து முடிவெடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News September 28, 2025

அபிமன்யு ஓரங்கட்டப்பட இதுதான் காரணமா?

image

WI-க்கு எதிரான டெஸ்ட் சீரிஸில் <<17844595>>அபிமன்யு ஈஸ்வரன்<<>> அணியில் சேர்க்கப்படாததற்கு அவரது தந்தை தான் காரணம் என முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அபிமன்யுவின் தந்தை BCCI-க்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். 2022-ல் அபிமன்யு அணியில் சேர்க்கப்பட்டாலும், இதுவரை Playing XI-ல் அவர் இடம்பெறவில்லை.

News September 28, 2025

விஜய் செல்லாதது ஏன்?

image

கரூர் துயரச் செய்தி வந்தவுடனே செ.பாலாஜி, அன்பில் மகேஸ் கரூர் ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர். CM ஸ்டாலினும் கூட கரூர் விரைந்துள்ளார். இந்நிலையில், விஜய் சென்னை திரும்பிவிட்டார். இந்நிலையில், பலரும் விஜய் ஏன் செல்லவில்லை எனக் கேட்கின்றனர். சம்பவத்தால் விஜய் மிகத் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாலும், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாததாலும் தான் உடனடியாக செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!