News March 20, 2025
மதுக்கடைகளில் இனி பெண்களும் பணியாற்றலாம்…!

மதுக்கடைகளில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது மேற்குவங்க மாநிலம். 1909ம் ஆண்டு வங்க கலால் சட்டத்தை திருத்தி மேற்குவங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம், மதுக்கடைகள், மதுபான பார்களில் இனி பெண்களும் பணியாற்றலாம். பாலின பாகுபாட்டை களையும் நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக அமைச்சர் சந்திரிமா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 21, 2025
இது கேவலத்திலும் கேவலம்: BJP

டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் ஒட்டுவதைத் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, பாலியல் வன்கொடுமை, கொலைகள் & குடிபோதையில் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தும் குண்டர்களை காவல்துறையால் தடுக்க முடியவில்லை. ஆனால், பலரின் குடியைக் கெடுக்கும், டாஸ்மாக் கடைகளைப் பாதுகாக்க, துப்பாக்கியுடன் காவல் காப்பது கேவலத்திலும் கேவலம் என்று விமர்சித்துள்ளது.
News March 21, 2025
டிரைவர், கண்டக்டர் வேலை: இன்றே விண்ணப்பிக்கலாம்!

அரசு வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி <
News March 21, 2025
IPLல் 2 பந்து: புதிய விதி அறிமுகம்

IPL போட்டியின் நடப்பு சீசனில் புதிய விதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இரவு நேர ஆட்டங்களில் பந்து ஈரமாகி விடுவதால், 2 ஆவது இன்னிங்ஸில் புதிய பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 ஆவது ஓவருக்கு பின், நடுவரிடம் முறையிட்டு புதிய பந்து கேட்கலாம். பந்தின் மீது எச்சில் தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது. IMPACT வீரர் விதிமுறை 2 ஆண்டுகளுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.