News March 24, 2025
17 வயது சிறுவனை 30 முறை வன்கொடுமை செய்த பெண்!

ஜெயிலில் 17 வயது சிறுவனை, 47 வயது பெண் டாக்டர் ஒருவர் 30 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. USAவின் ஸ்டேடன் தீவில் உள்ள சிறையில் ‘தெரபி’ என்ற பெயரில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, தற்போது 21 வயதாகும் அந்த இளைஞர் புகார் அளிக்க, அந்த டாக்டர் மாயா ஹேய்ஸ் கைதாகி, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை போலும்..
Similar News
News September 29, 2025
BREAKING: விஜய் உடன் ராகுல் காந்தி பேச்சு

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் உடன் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது பிரசார கூட்டத்தில் குழந்தைகள் உள்பட 40 பேர் பலியான சம்பவத்தால் விஜய் மிகவும் மனவேதனையில் இருப்பதாக தவெக வழக்கறிஞர் அறிவித்திருந்தார். தனது இரங்கல் பதிவிலும் சொல்லொண்ணா துயரில் இருப்பதாக விஜய் பதிவிட்டிருந்த நிலையில், ராகுல் காந்தி பேசியுள்ளார். இது அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது.
News September 29, 2025
Asia Cup: கோப்பையை நோக்கி இந்தியா

ஆசிய கோப்பை ஃபைனலில் கோப்பையை நோக்கி இந்தியா போராடி வருகிறது. சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் பவர் பிளேயிலேயே சொற்ப ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர். இதனால் ஆட்டத்தின் நிலை மாறியபோது களத்திற்கு வந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.
News September 29, 2025
வைரலாகும் எம்ஜிஆர் போட்டோ

1980-ல் சென்னையில் எம்ஜிஆர் பேச்சை கேட்க திரண்ட மக்கள் கூட்டத்தை காட்டும் படம், தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இம்மாதிரி கூட்டங்களுக்கு சென்றுவந்த தங்கள் அப்பாக்களும் தாத்தாக்களும் ‘பையை தொலைத்துவிட்டோம்’, ‘செருப்பை விட்டுவிட்டோம்’ என்று கூறியதாக நினைவலைகளை ஷேர் செய்கின்றனர். இவ்வளவு பெரிய கூட்டத்தை அந்த காலத்தில் எப்படி கட்டுப்படுத்தி இருப்பார்கள்?