News October 3, 2024

கடலூர் எஸ்பி அலுவலகத்தில் விஷம் குடித்த பெண்

image

குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டையை சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி உமா (40). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த சோமு என்பவர் தன்னை தாக்கியதாகவும், இதுதொடர்பாக குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மதியம் 1 மணி அளவில் கடலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு விஷம் குடித்து விட்டு மனு அளிக்க வந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Similar News

News August 21, 2025

கடலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (20/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

சிவாயம்: ஊராட்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாளை (ஆக.21) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குமராட்சி அடுத்த சிவாயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி, பண்ருட்டி சசிகலா திருமண மண்டபம், திருமங்கலம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மற்றும் விருத்தாசலம் அடுத்த எடசித்தூர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!