News March 21, 2024
ரஷ்யாவில் போர் வேண்டாமென எழுதிய பெண்ணுக்கு சிறை

ரஷ்ய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சீட்டில் போர் வேண்டாமென சிவப்பு மையில் எழுதிய பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதுடன், ராணுவத்தை இழிவுப்படுத்தும் செயலில் ஈடுபட்டதாக அலெக்ஸாண்ட்ரா சிரியாட்டியேவா மீது குற்றம்சாட்டிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம், 8 நாள்கள் சிறையுடன், 40,000 ரூபிள் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
Parenting: குழந்தைகளிடம் இப்படி சொல்லுங்க; கேட்டுப்பாங்க

பெற்றோர்களே, குழந்தைகள் கேட்கும் அனைத்திற்கும் நீங்கள் ’NO’ என சொன்னால் அது அவர்களை விரக்திக்கு உள்ளாக்கும். இதனால் ’NO’ என சொல்வதற்கு பதிலாக இந்த முறைகளை நீங்கள் கையாளலாம். ➤அவர்கள் கேட்பதை கொடுக்கமுடியவில்லை என்றால், அதற்கு பதிலாக வேறு விஷயத்தை கொடுங்கள் ➤அவர்களது கவனத்தை திசைத்திருப்ப முயற்சியுங்கள் ➤’NO’ சொல்வதற்கான காரணத்தை விளக்குங்கள் ➤பொய்களை கூற வேண்டாம். SHARE.
News September 8, 2025
BREAKING: முடிவை மாற்றினார் செங்கோட்டையன்!

ஹரித்வார் போகவே டெல்லி செல்வதாகவும், பாஜக தலைவர்களை சந்தித்து பேசப் போவதில்லை என்றும் தெரிவித்த செங்கோட்டையன் தனது முடிவை தடாலடியாக மாற்றியுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், அமித்ஷாவை சந்தித்துள்ளார். அதில், அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவரிடம் செங்கோட்டையன் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் மறுபடியும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ?
News September 8, 2025
நாளை துணை ஜனாதிபதி தேர்தல்

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை (Sep 9) நாடாளுமன்றத்தில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். து.ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கல்லூரியில் ராஜ்யசபா MP-கள் 238 பேர், லோக்சபா MP-கள் 542 பேர் உள்பட மொத்தம் 781 MP-கள் வாக்களிப்பர். குறைந்தது 391 வாக்குகள் பெறுபவர் வெற்றிபெறுவார்.