News March 31, 2025
கோயிலுக்குச் சென்ற பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை

தெலங்கானா மாநிலம் ஓர்கொண்டா அருகே கோயிலுக்கு சென்ற திருமணமான பெண்ணை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. உறவினர்களுடன் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றுவிட்டு குட்டா பகுதிக்கு திரும்பியபோது வழிமறித்த கும்பல், உறவினர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு பெண்ணின் கைகளைக் கட்டி இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. 6 பேர் சிக்கிய நிலையில், இருவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
ராசி பலன்கள் (17.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 17, 2026
CM ஸ்டாலின் வேங்கைவயலுக்கு செல்லாதது ஏன்?

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடந்த வேங்கைவயலுக்கு CM ஸ்டாலின் செல்லாதது குறித்து ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். ஒரு தனிமனிதனால் நிகழ்த்தப்பட்ட இந்த அநாகரிகத்துக்கு விசாரணை மட்டுமே ஒரே தீர்வு என கூறியுள்ளார். நிலச்சரிவு, பேரிடர் என்றால் CM நேரில் செல்லலாம், ஆனால் இந்த விவகாரத்தை அவர் கோட்டையில் இருந்தே (தலைமைச் செயலகம்) பார்க்கிறார் என தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News January 17, 2026
சற்றுமுன்: தமிழகத்தில் கோர விபத்து

தென்காசி சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் (மினி பஸ்) கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளானதில் டிரைவர் மற்றும் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 குழந்தைகள் உள்பட 12 பேர் சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஹாஸ்பிடலில் உறவினர்கள் கதறி துடித்த காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது. இதனால் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


