News April 3, 2024
வெயிலில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் வெயிலில் மயங்கி விழுந்து ஜோஸ்பின் மேரி (40) என்ற பெண் உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டுக்கான கோடை காலம் அதிக வெப்பத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல்லில் இன்று வெயில் 39 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. இந்த வெயிலில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்லவும்.
Similar News
News February 9, 2026
தாயின் அந்தரங்க போட்டோவை காதலனுக்கு அனுப்பிய பெண்

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார், போலீசாரை அதிர வைத்துள்ளது. தன்னுடைய பிரைவேட் போட்டோக்களை தனது 23 வயது மகளின் போனில் பார்த்ததாகவும், அந்த போட்டோஸை மகளின் காதலனுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அந்த பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனையடுத்து, மகள் மற்றும் அவரது காதலனின் போன்களை பறிமுதல் செய்து போலீஸ் விசாரித்து வருகிறது. இதையெல்லாம் என்னவென்று சொல்வது?
News February 9, 2026
TNPSC தேர்வர்களுக்கு இழப்பீடு வழங்குக: காங்., MP

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக TNPSC Group 2 முதன்மைத் தேர்வு ரத்தானது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பயண இழப்பீடு வழங்க வேண்டும் என MP கார்த்தி சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்த குளறுபடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், போட்டித் தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிலையில்தான் திமுக உள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடின.
News February 9, 2026
ரீபைண்ட் ஆயிலால் உயிருக்கு ஆபத்தா?

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மாற்றாக தற்போது சமையலுக்கு ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. ஆனால், ரீபைண்ட் ஆயில் தயாரிப்புக்கான கெமிக்கல் ப்ராசசிங் முறை, உட்கொள்பவருக்கு உயிரிழப்பு பாதிப்பை உண்டாக்கலாம் எனவும் இதனால் இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் பலியாகின்றனர் என கேரள ஆயுர்வேதிக் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நீங்க என்ன எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்?


