News August 14, 2024

பெண் மருத்துவர் கொலை: சிபிஐ விசாரணை தொடக்கம்

image

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிபிஐ விசாரணையை தொடங்கியது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐயிடம் கொல்கத்தா காவல்துறை ஒப்படைத்தது. தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News November 26, 2025

கள்ளக்குறிச்சி: கரும்புத் தோப்பில் சேலையுடன் கிடந்த மண்டை ஓடு!

image

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி ராஜ், நேற்று (நவ.26) கரும்பு வெட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கரும்பு தோட்டத்தின் நடுவே எலும்பு துண்டுகளுடன் மண்டை ஓடு மற்றும் புடவை கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வி.ஏ.ஓ., சரவணனுக்கு தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசாரும் வந்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

News November 26, 2025

அருணாச்சல் இந்தியாவின் பகுதியே: வெளியுறவுத் துறை

image

அருணாச்சல் சீனா உடையது எனக்கூறி, அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் பிடித்துவைத்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது. இதனையடுத்து, சாங்னான் தங்களுக்கு சொந்தமானது. இந்தியாவால் அருணாச்சல் என்று அழைக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது என சீனா கூறியது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா EAM அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால், சீனா எவ்வளவு மறுத்தாலும், அருணாச்சல் இந்தியாவின் பகுதிதான் என கூறியுள்ளார்.

News November 26, 2025

சற்றுநேரத்தில் தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பம்

image

இன்று ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ள நிலையில், மறுபுறம் தமிழக அரசியலிலும் புதிய புயல் உருவாகியுள்ளது. ஆம்! தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படும் செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு வந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் (11 மணியளவில்) அவர் தனது MLA பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்று மாலையே விஜய்யை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!