News August 14, 2024
பெண் மருத்துவர் கொலை: சிபிஐ விசாரணை தொடக்கம்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிபிஐ விசாரணையை தொடங்கியது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐயிடம் கொல்கத்தா காவல்துறை ஒப்படைத்தது. தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
நாளை பள்ளிகள் விடுமுறையா?.. அரசு அறிவிப்பு

விஜய் பொதுக்கூட்டத்தையொட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என SM-ல் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி நேரம் தொடங்கிய பின் விஜய் வரவும், பள்ளி முடிவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் அறிவித்துள்ளார். அதனால், நாளை விடுமுறை இல்லை. அதேநேரம், பொதுக்கூட்ட பகுதியில் ஒரேயொரு தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை.
News December 8, 2025
உங்களுக்கு ப்ரோமோஷன் வேண்டுமா? இதுதான் முக்கியம்!

70-20-10 என்ற முறையில்தான் ப்ரோமோஷனுக்காக பரீட்சை நடக்கிறது. இதில் 70% பணி அனுபவம், 20% புதிய ஆலோசனைகளை வழங்குவது, 10% பாடங்கள் வழி கற்கும் திறன் போன்றவை அடங்கும். இதுமட்டுமல்லாமல், ப்ராஜெக்ட்டை கையாளுதல், அணியை நிர்வகித்தல், ஜூனியருக்கு ஆலோசனை&பயிற்சி வழங்குதல், நெருக்கடி நேரத்தில் எடுக்கும் முடிவு போன்றவற்றில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதையும் கருத்தில் கொள்கிறார்கள்.
News December 8, 2025
மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

டெல்டா, தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக நீடித்த மழை சற்று ஓய்ந்துள்ளது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் டிச.14 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை(டிச.9) மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் செல்வோர் கவனமாக இருங்கள்!


