News January 24, 2025

பெண்ணின் பிறப்புறுப்பில் கத்தி, பிளேடு புகுத்தி கொடூரம்

image

மும்பையில் 20 வயது இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பிறப்புறுப்பில் கத்தி, பிளேடு புகுத்திய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி ‘நிர்பயா’ சம்பவத்தை விட கொடூரமான முறையில் நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கடந்த 21ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிக்கியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ளார்.

Similar News

News December 5, 2025

தமிழ் சினிமாவின் சிகரம் மறைந்தது.. குவியும் இரங்கல்

image

அரை நூற்றாண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய அங்கமாக விளக்கி வந்த <<18470141>>AVM சரவணன்(86)<<>> நேற்று மறைந்தார். நேற்று நேரில் செல்ல முடியாத திரை பிரபலங்கள் பலரும் இன்று அவரது குடும்பத்தினருக்கு சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், எரிமேடையில் AVM சரவணன் உடலை பார்த்தபோது, எனக்கான காசோலையில் கையொப்பமிட்ட கையை பார்த்து கண்ணீர் முட்டியது என கவிஞர் வைரமுத்து வேதனையுடன் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News December 5, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்

image

<<18463810>>திருப்பரங்குன்றத்தில்<<>> தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் லோக்சபா குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் ராஜ்யசபா குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

News December 5, 2025

ஜெ. ஜெயலலிதா என்னும் ஆளுமை..!!

image

அம்மா என அதிமுகவினரால் அழைக்கப்படும் ஜெயலலிதா மறைந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும், தன்னுடைய மக்கள் பணிகளின் மூலம் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மாணாக்கருக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், அனைத்து மகளிர் காவல் நிலையம் என அவர் செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். அவரின் நலதிட்டங்களை நினைவுக்கூர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!