News January 24, 2025
பெண்ணின் பிறப்புறுப்பில் கத்தி, பிளேடு புகுத்தி கொடூரம்

மும்பையில் 20 வயது இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பிறப்புறுப்பில் கத்தி, பிளேடு புகுத்திய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி ‘நிர்பயா’ சம்பவத்தை விட கொடூரமான முறையில் நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கடந்த 21ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிக்கியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ளார்.
Similar News
News December 3, 2025
ஆவின் விவகாரத்தில் திமுக நாடகம்: அன்புமணி

தமிழக அரசுத்துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலையை 5-வது முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜிஎஸ்டி வரிகுறைப்பை நடை முறைப்படுத்த தவறிய திமுக மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுபடுத்த தள்ளுபடி நாடகத்தை அரங்கேற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி நடத்த வேண்டிய திமுக, அதற்கு எதிராக நாடகம் நடத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் சாடியுள்ளார்.
News December 3, 2025
நள்ளிரவு 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பொழியும்

நள்ளிரவு 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர், விருதுநகரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?
News December 3, 2025
நாளை காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.


