News April 14, 2024
ஒற்றுமை இன்றி I.N.D.I.A கூட்டணி பலமிழந்து விட்டது

ஒற்றுமை இல்லாததால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலமிழந்து விட்டதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சாதி வாரிக் கணக்கெடுப்பு கருத்தில் கொள்ள வேண்டியது எனினும், சிறந்த கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் மூலம் பின்தங்கியோருக்கு அதிகாரம் வழங்குவது அவசியம் எனவும், காங்கிரஸ் தனது அமைப்பு ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
பிஸ்கெட்டில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

பலரது ஃபேவரைட்டாக இருக்கும் பிஸ்கெட்டில் துளைகள் இருப்பது ஏன் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? பிஸ்கெட்டில் உள்ள துளைகள் ‘Dockers’ என அழைக்கப்படுகிறது. பேக்கிங் செய்யும்போது மாவு மிகவும் உப்பிவிடக்கூடாது எனவும் பிஸ்கெட் கிரிஸ்பியாக வரவேண்டும் என்றும் இந்த செய்முறை பின்பற்றப்படுகிறது. இப்படி செய்வதால் பிஸ்கெட் உடையாமலும் இருக்குமாம். 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE THIS.
News December 4, 2025
BREAKING: இன்றே தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவு

திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். அப்போது மதுரை காவல் ஆணையர் மற்றும் கலெக்டரிடம் கோர்ட் உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தீபத்தூணில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
News December 4, 2025
இந்தியா இதை செய்தாக வேண்டும்: ரஷ்ய MLA

S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க, ரஷ்ய அதிபர் புடினிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பாட்னாவில் பிறந்த ரஷ்ய MLA-வான அபே சிங் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற அமைப்பு சீனாவிடம் கூட இல்லை எனவும், வேறு நாடுகளுக்கு விற்காமல் ரஷ்யா மட்டுமே பயன்படுத்தும் இந்த அமைப்பை இந்தியா பெற்றால், மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ரஷ்யாவின் குருஸ்க் பகுதி MLA-ஆக அபே சிங் உள்ளார்.


