News August 10, 2024
மேலாண்மை சட்டத்தில் திருத்தம் கோரிய வில்சன்

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இல் திருத்தம் செய்ய கோரி திமுக எம்.பி., வில்சன் தனிநபர் மசோதா அறிமுகம் செய்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், “பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பிரதமரும், அவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும். ஆளுங்கட்சி & எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்ற வேறுபாடில்லாமல், நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News November 21, 2025
தேஜஸ் விபத்து சதியாக இருந்தால்… யாருக்கு லாபம்?

<<18350384>>தேஜஸ் விமான விபத்து<<>> சதியாக இருந்தால், அதற்கு இவை பின்னணி காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்: *சில நாடுகளின் போர் விமான பிசினஸ் பாதிக்கப்படும் *அவர்களுக்கு பிடிக்காத நாடுகள் தேஜஸை வாங்குவதை விரும்பவில்லை *இந்தியாவின் தன்னம்பிக்கையை உடைப்பது *உள்நாட்டில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி குழப்பம் விளைவிப்பது *இந்தியாவின் ஆயுதங்கள், பாதுகாப்புத் துறை மீதான நம்பிக்கையை உடைப்பது.
News November 21, 2025
அழுகிய மனைவி உடல்.. கொடூர கணவன் சிக்கினான்

குஜராத், பவ்நகரில் நடந்துள்ள கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரியான கம்பலா, சக பெண் அலுவலருடன் உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்த அவரது மனைவி, மகள்(13), மகன்(9) திடீரென காணாமல் போயுள்ளனர். போலீஸின் தீவிர விசாரணையில் கம்பலா வீட்டருகிலேயே 3 பேரின் அழுகிய உடல்கள் கிடைத்துள்ளன. அவர்களை கொலை செய்ததாக கம்பலா கைது செய்யப்பட்டுள்ளார்.
News November 21, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணிகள் மாவட்ட வாரியாக தொடங்கியுள்ளன. தகுதியுள்ள மாணவர்கள், ரேஷன் அட்டை நகல், ஆதார் நகல், வயது சான்று நகல், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு 18 வயது வரை தமிழக அரசு மாதம் ₹2,000 வழங்க உள்ளது.


