News June 10, 2024
விவசாயிகளுக்காக அதிகம் உழைக்க விருப்பம்: மோடி

விவசாயிகளுக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, முதல் உத்தரவாக விவசாயிகளுக்கான உதவித் தொகையை விடுவிக்கும் கோப்பில் கையெழுத்திட்டார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய அரசின் முதல் முடிவு விவசாயிகளின் நலனுக்கான அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும், விவசாயிகளுக்காகவே தங்களது அரசு செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News September 3, 2025
இளையராஜா விழாவில் விஜய், அஜித்?

செப்.13-ல் தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. சென்னையில் நடைபெறும் இந்நிகழ்வில் ரஜினி, கமல், மற்ற திரையுலக ஜாம்பவான்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். வெளிநாட்டில் இருக்கும் CM ஸ்டாலின், தமிழகம் திரும்பிய பிறகு இவ்விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதற்கு திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், விஜய், அஜித் பங்கேற்பார்களா?
News September 3, 2025
கில்லை வைத்து BCCI போடும் ப்ளான் : உத்தப்பா

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ், ஜெய்ஸ்வால் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர்களை தவிர்த்துவிட்டு சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்ததற்கு பின்னால் பக்கா பிஸ்னஸ் உள்ளதாக ராபின் உத்தப்பா கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், சச்சின், தோனி, கோலி, ரோஹித் வரிசையில் கில்லை, இந்திய அணியின் பிராண்டாக BCCI மாற்றவுள்ளது என்றார்.
News September 3, 2025
பாஜகவுடன் கூட்டணி ஏன்? EPS விளக்கம்

திமுக கூட்டணி கட்சிகளே ஜாக்கிரதை, ஸ்டாலின் உங்களை விழுங்கிவிடுவார் என EPS விமர்சித்துள்ளார். திமுக அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் இழைத்து வருவதாகவும், பொதுக்கூட்டங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கும் போது அதிமுகவிற்கு பிரகாசமான ஒளி இருப்பது தெரிவதாகவும் கூறியுள்ளார்.