News October 28, 2025

விஜய் வாய் திறப்பாரா? ரவிக்குமார் MP

image

SIR பணிகளை தேர்தல் ஆணையத்தின் துணையோடு பாஜக மேற்கொள்ளும் வாக்குத் திருட்டு என்று தமிழகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் எதிர்க்கின்றனர் என விசிக MP ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அந்த வகையில், பாஜகவை தனது கொள்கை எதிரி என கூறும் தவெகவும் இதனை எதிர்க்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் வாய் திறப்பாரா என்றும் கேட்டுள்ளார். கரூர் துயருக்கு பிறகு சமூக பிரச்னைகளுக்கு தவெக குரல் கொடுக்கவில்லை.

Similar News

News October 28, 2025

உலகின் வயதான அதிபரானார் பால் பியா

image

கேமரூனில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குளறுபடி நடந்ததாக அங்கு வன்முறை வெடித்தது. இதனால் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில், பால் பியா 53.66% வாக்குகளையும், எதிர்த்து போட்டியிட்ட இசா சிரோமா 35.19% வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம் 92 வயதில் மீண்டும் அதிபரான பால் பியா, உலகின் மிகவும் வயதான அதிபர் என்ற சாதனையையும் படைத்தார். 1984-ல் இருந்து (41 ஆண்டுகளாக) பால் பியாதான் அதிபராக உள்ளார்.

News October 28, 2025

விஜய் அரசியலுக்கே தகுதியற்றவர்: கருணாஸ்

image

மக்கள் பிரச்னையை மக்களோடு மக்களாக நின்று சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்கே தகுதியற்றவர்கள் என்று விஜய்யை, கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யை விட பெரிய கூட்டத்தை கையாண்டவர் விஜயகாந்த் என குறிப்பிட்ட கருணாஸ், சும்மா ஏதோ சப்ப கட்டு கட்டக்கூடாது என்று காட்டமாக பேசினார். கரூர் துயரை அடுத்து விஜய்யின் செயல்பாடுகள் மீதே அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

News October 28, 2025

ராணிப்பேட்டையில் பள்ளிகள் இயங்கும்.. புதிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டையில் இன்று(அக்.28) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘மொன்தா’ புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அந்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு WAY2NEWS பேசியது. அப்போது, சில ஊடகங்களில் தவறான தகவல் பரவுவதாகவும், இன்று பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!